Just In
- 17 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 22 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இந்தியாவுக்காக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்கள்... கியாவுடன் கூட்டணி... ஹூண்டாய் மாஸ்டர் பிளான் ரெடி!
இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு கணிசமாக உயர்ந்து வருவதையடுத்து, பெரிய அளவிலான முதலீட்டு திட்டத்தை ஹூண்டாய் மோட்டார்ஸ் கையில் எடுத்துள்ளது. கியா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மிக சவாலான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் பல புதிய மாடல்களை களமிறக்குவதற்கான திட்டங்களை வகுத்து விட்டது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம். இதற்காக ரூ.3,200 கோடியை முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதில், ரூ.1,000 கோடியை விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி களமிறக்குவதற்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கு 90 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்துவதற்கும் ஹூண்டாய் மோட்டார் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, போட்டியாளர்களை விட மிக சவாலான விலையில் எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க வாய்ப்பு கிடைக்கும்.
இந்தியாவுக்கான எலெக்ட்ரிக் கார் மாடல்கள் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு ஹூண்டாய் இந்தியா நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ்.கிம் பேட்டி அளித்துள்ளார். அதில், உலக அளவில் விற்பனையில் உள்ள எங்களது எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்தியாவிலும் களமிறக்குவதற்கான முனைப்பில் உள்ளோம்.
அதேநேரத்தில், வாடிக்கையாளர்களுக்கு தோதுவான விலையில், போதிய தூரம் பயணிக்கும் திறன் கொண்டதாகவும் இருக்க விரும்புகிறோம். இதற்காக பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தியாவுக்காக உருவாக்கப்படும் முதல் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் மாடலானது மினி எஸ்யூவி மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ரூ.10 லட்சத்திற்குள் இருக்கும். மஹிந்திரா இ-கேயூவி100 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வரிச்சலுகைகளையும் எலெக்ட்ரிக் கார்களுக்கு வழங்குகின்றன. இதனால், அடுத்து வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.