அடுத்த ஆண்டு புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்கிறது Hyundai! இது எதற்கு உதவும் தெரிஞ்சா வியப்பில் மூழ்கிடுவீங்க
வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் குழுமம் (Hyundai Motor Group) அடுத்த ஆண்டு புதிய ஆட்டோமோட்டிவ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குதளத்தை (Automotive Operating System Platform) வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் குழுமம் (Hyundai Motor Group) அடுத்த ஆண்டு புதிய ஆட்டோமோட்டிவ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குதளத்தை (Automotive Operating System Platform) வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் குழுமம் (Hyundai Motor Group), மிக விரைவில் புதிய ஆட்டோமோட்டிவ் ஆபரேட்டிங் சிஸ்டம் பிளாட்பாரத்தை (Automotive Operating System Platform) அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை நிறுவனம் நேற்றைய தினம் (நவம்பர் 11) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தகுந்தது.

தன்னாட்சி இயக்கம் (autonomous driving), பசுமை இயக்க தொழில்நுட்பம் (green technologies), செயற்கை நுண்ணறிவு ஆட்டோமோட்டிவ் (automotive AI) மற்றும் எதிர்கால இயக்கம் மற்றும் தளவாடங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க உதவும் பெரிய தரவு சேமிப்பகம் (big data to contribute to the growth of future mobility and logistics) ஆகியவற்றை உருவாக்குவதே இப்புதிய பிளாட்பாரத்தின் முக்கிய பணி ஆகும்.

இந்த இயங்குதளமானது இணைக்கப்பட்ட கார் சேவை பயன்பாடு (connected car service application), தன்னாட்சி ஓட்டுநர் (autonomous driving), இயக்கம் சேவைகள் (mobility services), பவர் பிளாட்பாரம் (power platform) மற்றும் மென்பொருள் (software) ஆகியவற்றின் கலவையாக செயல்படும் என நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது.

மேலும், இது வாகனங்களுக்கு இடையேயான இணைப்பு (inter-vehicle connectivity) மற்றும் இயக்கம் (mobility) ஆகியவற்றையும் மேம்படுத்தும். இவற்றிற்காகவே புதிய பிளாட்பாரத்தை ஹூண்டாய் மோட்டார் குழுமம் உருவாக்கி வருகின்றது. இந்த தளத்திற்காக டிஏஏஎஸ் எனும் புதிய பிரிவை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

போக்குவரத்து ஒரு சேவை (transportation-as-a-service) என்பதே இதன் அர்த்தம் ஆகும். இப்பிரிவிற்கு ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் மென்பொருள் நிபுணராக இருந்த சாங் சாங்-ஹியூன் (Song Chang-hyun), அவரே தலைமை தாங்குகிறார். இத்துடன், இந்த புதிய பிளாட்பாரத்திற்காக நிறுவனம் 23 பார்ட்னர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய பிளாட்பாரமானது அடுத்த வருடம் அறிமுகமாகி விடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, நிறுவனத்தின்கீழ் மிக விரைவில் மிக அதிக தொழில்நுட்ப வசதிக் கொண்ட புதுமுக வாகனங்கள் உருவாக்கப்பட இருப்பது உறுதியாக தெரிகின்றது. ஹூண்டாய் நிறுவனம் நேற்றைய தினம் புதுப்பிக்கப்பட்ட க்ரெட்டா எஸ்யூவி காரை உலகளவில் வெளியீடு செய்தது.

மிக விரைவில் இந்த புதுப்பிக்கப்பட்ட க்ரெட்டா எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. தற்போது, இந்தோனேசியா சந்தையில் இக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ரூ. 14.56 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இக்கார் இந்தோனேசியா சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது.

பல்வேறு அப்டேட் செய்யப்பட்ட அம்சங்களுடன் இது களமிறங்கியிருக்கின்றது. ஆக்டீவ், பிரைம், ஸ்டைல் மற்றும் டிரெண்ட் ஆகிய நான்கு விதமான தேர்வுகளில் புதிய க்ரெட்டா விற்பனைக்குக் கிடைக்கும். இது இந்தியாவில் விற்பனைக்கு வருமானால், நாட்டில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எம்ஜி அஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 உள்ளிட்ட எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக அமையும்.

ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை தற்போது டல்லடிக்கத் தொடங்கியிருக்கின்றது. இதுமாதிரியான சூழ்நிலையில் நிறுவனத்தின் இப்புதுமுக க்ரெட்டா களமிறக்கப்படுமானால், நிச்சயம் அதன் விற்பனையில் மாற்றம் ஏற்படும் என நம்பப்படுகின்றது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 56,605 யூனிட் வாகனங்களை விற்பனைச் செய்திருந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் வெறும் 37,021 யூனிட் கார்களை மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது. இது 34.6 சதவீதம் விற்பனை வீழ்ச்சி என நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கின்றது.

இந்த விற்பனை வீழ்ச்சிக்கு செமி-கன்டக்டர் பற்றாக்குறை மற்றும் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஆகியவை முக்கிய காரணிகளாக அமைந்திருக்கின்றன. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றது. இதன் விளைவாக எரிபொருளால் இயங்கும் வாகனங்களின் கணிசமாக குறைந்து காணப்படுகின்றது. இதன் விளைவாக நடப்பாண்டு திருவிழாக் காலங்கள் வாகன உற்பத்தியாளர்களுக்கு சற்று மோசமான விழாக் காலமாகவே மாறியுள்ளது என்று கூட கூறலாம்.


Click it and Unblock the Notifications








