Just In
- 45 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 2 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Movies அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
முதல்வரை நேரில் சந்தித்த ஹூண்டாய் நிறுவன அதிகாரிகள்! தமிழக மக்களுக்காக வெயிட்டா ஒரு அமவுண்ட் கொடுத்திருக்காங்க
தமிழக முதல்வரை நேரில் சந்தித்த ஹூண்டாய் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அரசுக்கு உதவும் வகையில் நிவாரண நிதியை வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
126 தொகுதிகளில் வென்று தமிழகத்தின் மாபெரும் கட்சியாக திமுக உருவாகியிருக்கின்றது. தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பிற மாநிலங்களைக் கண்டு பொறாமைப்பட்டு வந்த தமிழக மக்களை, ஆஹா, நல்ல ஆட்சிக்கான அறிகுறி இது என சிந்திக்கும் வகையில் சிறப்பான ஆட்சியை வழங்க ஆரம்பித்திருக்கின்றார், முக ஸ்டாலின்.
கொரோனா வைரஸ் தமிழகத்தில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும்நிலையில், இதில் இருந்து மாநிலம் மீண்டு வர வேண்டும் என்பதற்காக தாராளமாக நிதியை வழங்க முன்வருமாறு மக்களிடத்தில் அண்மையில் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனடிப்படையில், நடிகர் சிவகுமார் குடும்பத்தினர், அஜித் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நிதியுதவியை வழங்கினர். இந்த நிலையில், பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணங்களை தமிழகத்திற்கு வழங்கியிருப்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஹூண்டாயும் ஒன்று. தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் புதிய அரசுக்கு உதவியளிக்கும் வகையில் பல சிறப்பு திட்டங்கள் அடங்கிய நிவாரணத்தை பிரத்யேகமாக தமிழகத்திற்கு இது வழங்கியிருக்கின்றது.
ரூ. 10 கோடி மதிப்பிலான கொரோனா நிவாரண தொகையை ஹூண்டாய் தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. அதில், ரூ. 5 கோடி காசோலையாக வழங்கப்பட்டிருக்கின்றது. தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக இது வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ரூ. 5 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் கருவிகளையும் நிறுவனம் வழங்கியிருக்கின்றது.
இதுமட்டுமின்றி, 'ஹூண்டாய் கேர் 3.0' திட்டத்தின் வாயிலாக ரூ. 25 கோடியை நிறுவனம் ஒதுக்கியுள்ளது. இந்த தொகை தேசிய அளவில் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்எஸ் கிம் தமிழகத்திற்கான நிவாரண தொகையை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் வழங்கினார்.
இதுமட்டுமின்றி, உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை ஏற்படுத்தவும் மேலும் ரூ. 5 கோடி அளிக்கப்படும் எனவும் ஹூண்டாய் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அப்டேட் செய்யப்பட்ட க்ரெட்டா எஸ்யூவி கார்கள் இந்திய ஷோரூம்களில் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன. உற்பத்தி ஆலையில் இருந்து கன்டெய்னர்கள் வாயிலாக கார்கள் ஷோரூம்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது போன்ற படங்களும் வெளியாகியிருக்கின்றன.
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!