நாடு திரும்பிய கையோடு சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... அவர் யார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!
பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒருவர் புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தந்தையின் இறப்பிற்குக் கூட நாடு திரும்பாமல் தாய் நாட்டிற்காக விளையாடி புதிய சாதனையைப் படைத்தவர் முகமது சிராஜ். இத்தகைய தியாக செயலினால் இந்தியர்களின் மனம் கவர்ந்த வீரர்களில் ஒருவராக இவர் மாறியிருக்கின்றார். இவரே விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை புதிதாக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகமது சிராஜ், அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவின்படி, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு காரையே அவர் வாங்கியிருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், அது என்ன மாடல், எவ்வளவு தொகையில் வாங்கப்பட்டிருக்கின்ற என்கிற தகவல் தெளிவாக தெரியவரவில்லை.

காரின் உருவம் மற்றும் ஸ்டைலை வைத்து பார்க்கையில் இக்கார் பிஎம்டபிள்யூ 5 செரீஸ் காராக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இக்கார் இந்தியாவில் ரூ. 55.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய விலையுயர்ந்த காரையே முகமது சிராஜ் தற்போது வாங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

முகமது சிராஜ் இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருக்கின்றார். அவர் புதிய காரைக் கொண்டு ஹைதராபாத் சாலையில் பயணிப்பது போன்ற வீடியோவையும் ஸ்டோரியில் பதிவு செய்திருக்கின்றார். இந்த வீடியோ தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

ஆஸ்திரேலியாவில் இருந்தபோது தனது தந்தை இறந்த செய்தி அறிந்த பின்னரும் இவர் தாய் நாடு திரும்பவில்லை. இதனால், இந்திய கிரிக்கெட் பிரியர்களை மட்டுமின்றி உலகம் தழுவிய அளவில் அநேகரின் கவனத்தையும் இவர் ஈர்த்தார்.

ஆஸ்திரேலியா பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு வீடு திரும்பிய பின்னர் நேரடியாக தனது தந்தையின் கல்லறைக்கு சென்று அவர் இறுதி அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னரே தனது பிற பணிகளில் அவர் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றார்.

தந்தையை இழந்த கவலையையும், துக்கத்தையும் மனத்தில் சுமந்து கொண்டிருந்த போதிலும் இவர் ஆஸ்திரேலிய மண்ணில் செய்த சாதனை புதிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகின்றது. மெல்போர்னில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியிலேயே இவர் அறிமுகமானார். இந்த டெஸ்ட் போட்டியில் ஒட்டுமொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிரிஸ்போனில் நடைபெற்ற 4வது போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு புதிய பெறுமையைச் சேர்த்தார். தனது தந்தையை இழந்த துக்கத்தை மறைத்தே முகமது சிராஜ் இந்த அனைத்து சாதனைகளையும் படைத்தார். தாய் நாடு திரும்ப அனுமதி கிடைத்தபோதும் அதை மறுத்து தனது தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக இந்திய அணியுடன் தொடர்ந்து தனது பங்களிப்பை அளித்தார் சிராஜ்.


Click it and Unblock the Notifications








