Just In
- 4 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 4 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 5 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 5 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கார்ல போகும்போது மாஸ்க் மட்டுமல்ல இதையும் கட்டாயம் கடைபிடிக்கணுமாம்! அதிரடி காட்டும் பினாரயி விஜயன்!
ப்ளூடூத், இயர்ஃபோன் ஆகியவற்றை பயன்படுத்தினால் லைசென்ஸ் இடைநீக்கம் செய்யப்படும் என கேரள மோட்டார் வாகன துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
இந்திய போக்குவரத்து வாகன விதிகளின்படி, செல்போனில் பேசியபடி, வாகனங்களை இயக்குவது விதிமீறல் செயலாகும். இந்த விதி பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கின்றது. இந்த விதி இருசக்கர வாகனங்களுக்கும் மட்டுமே பொருந்தும் என ஒரு சிலர் தவறுதலாக புரிந்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், காரில் பயணிப்பவர்களுக்கும் இவ்விதி பொருந்தும். காரை இயக்குபவர்கள் செல்போனை மட்டுமல்ல ப்ளூடூத் மற்றும் இயர்ஃபோன் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பழைய விதியையே கேரள அரசு தற்போது தூசி தட்டி நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
முன்னதாக இந்த விதியின்கீழ் வாகன ஓட்டிகள் பலர் அபராத செல்லாண்களை பெற்றிருந்தாலும், இந்த சம்பவம் அவ்வப்போதே அரங்கேறி வந்தது. ஆனால், இனி வரும் காலங்களில் இதை தீவிரமாக கண்கானிக்கும்படி மோட்டார் வாகன பிரிவிற்கு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டிருக்கின்றது.
மேலும், இம்முறை அபராத செல்லாண்களுக்கு பதிலாக, வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கிக் கொண்டிருக்கையில் செல்போன் அல்லது ப்ளூடூத் ஆகியவற்றைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் (suspension) செய்ய போக்குவரத்ததுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.
ஆகையால், கடந்த காலங்களில் இந்த விதிமீறலுக்கு செல்லாண் வழங்கி அபராதம் மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஆனால், இனி வரும் காலங்களில் இவ்விதமீறலை கேரள வாசிகள் செய்தால் லைசென்ஸை இழக்க நேரிடும் என மோட்டார் வாகன துறையினர் எச்சரிக்க தொடங்கியிருக்கின்றனர். தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் பெரும்பாலான கார்களில் ப்ளூடூத் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழக்கமான அம்சமாக வழங்கப்படுகின்றது.
இதன் வாயிலாக செல்போனை இணைத்தல், அதில் வரும் குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகளை ஏற்தல் உள்ளிட்டவற்றை நம்மால் செய்ய முடியும். இந்த மாதிரியான கருவியைப் பயன்படுத்துவதை அவ்வளவு எளிதில் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
இத்தகைய நடவடிக்கையைக் கட்டுப்படுத்தவே ப்ளூடூத் இணைப்பு சாதனங்களை பயன்படுத்தவும் தற்போது விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வரைஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டு முழு முடக்கம் லேசான தளர்வுகளுடன் விளக்கப்பட்டு வருகின்றது.
ஆகையால், நாட்டில் வாகனங்கள் மீண்டும் பழைய நிலையில் இயங்க தொடங்கியிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் பொருட்டு கேரள அரசு, விதிமீறல்வாதிகள் மீது தங்களது பார்வையை திருப்பத் தொடங்கியிருக்கின்றது.
2019ம் ஆண்டில் ஒன்றிய மோட்டார் வாகன விதி 21 (25)ன் கீழ் ஓர் புதிய விதியை கேரள உயர் நீதிமன்றம் வெளியிட்டது. அதில், வாகனங்களில் ப்ளூடூத் கருவிகளுக்குகூட தடைவிதித்து உத்தரவிடப்பட்டது. இந்த விதியை மீண்டும் கேரள போக்குவரத்துத் துறை கையிலெடுக்கத் தொடங்கியுள்ளது.