Just In
- 54 min ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 2 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 8 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 8 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
Don't Miss!
- Movies Vijay In Kerala - அய்யய்யோ இது என்ன விபரீதம்.. கேரளாவில் நொறுங்கிய விஜய்யின் கார்?.. ட்ரெண்டாகும் வீடியோ
- News தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு எப்போது? பள்ளி கல்வித்துறை சூப்பர் முடிவு
- Finance ஸ்மார்ட் போன் வாங்கப் போறீங்களா? ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் உயர்ரக பிராண்டட் போன்கள்..
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
இவ்ளோ தரமானதா இருந்தா யாருதான் வாங்காம இருப்பா... 226 Tata Nexon EV காரை ஆர்டர் செய்த கொல்கத்தா காவல்துறை!
கொல்கத்தா காவல்துறை பயன்பாட்டிற்காக மேற்கு வங்க மாநில அரசு ஒட்டுமொத்தமாக 226 Tata Nexon EV கார்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்வுகுறித்த தகவலையும், டாடா நெக்ஸான் இவி காரின் சிறப்பு அம்சங்கள்குறித்த முக்கிய தகவலையும் இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பிரபல மின்சார கார் மடால்களில் நெக்ஸான் இவி (Nexon EV)-யும் ஒன்று. இந்தியாவின் மலிவு விலை மின்சார காராக இது இருந்தது குறிப்பிடத்தகுந்தது. அண்மையில் டாடா டிகோர் இவி (Tata Tigor EV)இன் வருகையால் நெக்ஸான் இவி சற்று காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காராக தென்படத் தொடங்கியிருக்கின்றது.
ஆம், டாடா நெக்ஸான் இவி-யைக் காட்டிலும் மிக மிக குறைவான விலையில் டாடா டிகோர் இவி இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஆனால், இதைக் காட்டிலும் பிரீமியம் தரம் மற்றும் ரேஞ்ஜ் விஷயத்தில் அதிக சிறப்புகள் நிறைந்த வாகனமாக டாடா நெக்ஸான் இவி இருக்கின்றது.
எனவேதான் இதைவிட மலிவு விலை எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்திருக்கின்ற போதிலும் டாடா நெக்ஸான் இவி-க்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் கிடைத்து வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது கொல்கத்தா காவல்துறையிடம் பெரிய ஆர்டர் டாடா மோட்டார்சுக்கு கிடைத்திருக்கின்றது.
காவல்துறை பயன்பாட்டிற்காக 226 அலகுகள் டாடா நெக்ஸான் இவிக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. டாடா நெக்ஸான் இவி கார் காவல்துறை பயன்பாட்டிற்காக நமது நாட்டில் வாங்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக கேரள மாநில அரசு அதன் மோட்டார் வாகன துறை (MVD) பயன்பாட்டிற்காக வாங்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.
இதைத் தொடர்ந்து, தற்போது மேற்கு வங்க மாநில அரசு கொல்கத்தா காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க இருக்கின்றது. இதன் வாயிலாகக் கணிசமாக மாசு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும் என மாநில அரசு நம்புகின்றது.
தற்போது வாங்கப்படும் அனைத்து மின்சார கார்களும் காவல்துறையினரின் பயன்பாட்டில் 15 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும் கார்களை அப்புறப்படுத்தி, அவற்றிற்கு பதிலாக புதிய டாடா நெக்ஸான் இவி-க்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. பழைய வாகனங்களினால் அதிக எரிபொருள் செலவு மற்றும் மாசு உமிழ்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
அவற்றைக் குறைக்கும் பொருட்டே மேற்கு வங்க மாநில அரசு இத்தகைய பெரிய ஆர்டரை டாடா மோட்டார்சுக்கு வழங்கியிருக்கின்றது. கொல்கத்தா காவல்துறையின் பல்வேறு துறைகளுக்காக நெக்ஸான் இவி வாங்கப்பட்டிருக்கின்றது. போக்குவரத்துத்துறை மற்றும் ஒயர்லெஸ் பிரிவு படையைச் சேர்ந்தவர்களின் பயன்பாட்டிற்கும் நெக்ஸான் இவி வழங்கப்பட இருக்கின்றது.
புதிய மின்சார வாகனங்களுக்காக ரூ. 8.82 கோடிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற மேற்கு வங்க அரசு பெருமளவில் மின் வாகனங்களை வாங்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக சில வருடங்களுக்கு முன்னர் மஹிந்திரா இ2ஓ (Mahindra e2O) எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் ரக காரை அரசு வங்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.
மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் கார் தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேலையில், நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்றளவும் பலர் இக்காரை பயன்படுத்தி வருகின்றனர். இக்காரைக் காட்டிலும் பல மடங்கு அதிக பயன் உள்ள எலெக்ட்ரிக் காராக டாடா நெக்ஸான் இவி காட்சியளிக்கின்றது.
இக்கார் அதிகபட்சமாக 312 கிமீ தூரம் வரை ஒற்றை முழுமையான சார்ஜில் பயணிக்கும் திறன் கொண்டது. இது அராய் அமைப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். இக்காரை வீடுகளில் இருக்கும் 15A சாக்கெட்டுகளில் வைத்துக்கூட சார்ஜ் செய்துகொள்ள முடியும். அவ்வாறு சார்ஜ் செய்யும்போது 8 மணி நேரங்கள் வரை முழுமையாக சார்ஜாக நெக்ஸான் இவி எடுத்துக் கொள்ளும்.
அதுவே டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டின் வாயிலாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் இக்காரை வெறும் 60 நிமிடங்களில் சார்ஜ் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இத்துடன், சார்ஜ் அளவு மிகக் குறைவாக இருக்கும்போது தானே ஆற்றலை மீட்டமைக்கும் வசதியும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.
கொல்கத்தா காவல்துறை:
தற்போது கொல்கத்தா காவல்துறையின் பயன்பாட்டில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இருசக்கர வாகனங்களுடன் சேர்த்து அளவிடப்பட்ட எண்ணிக்கை இதுவாகும். இதில், 200க்கும் அதிகமான வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான வயதுடைய வாகனங்கள் ஆகும்.
இவற்றால் மாசுபாடும் அதிகம், அரசுக்கு எரிபொருள் செலவும் அதிகம். இதனைக் குறைக்கும் பொருட்டே தற்போது டாடா நெக்ஸான் இவி காருக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஓர் அதிக பிரீமியம் தர வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் வாகனம் மட்டுமல்ல, நல்ல பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராகவும் இருக்கின்றது. இத்தகைய காரணத்தினால்தான் மக்கள் தொடங்கி அரசு துறைகள் என அனைத்து பக்கங்களிலும் இக்கார் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
-
கார் ஓட்டும்போது நிறைய பேரு இந்த தவறு பண்ணுறோம்!! வெளிநாடுகளில் இதுக்கு தடை இருக்கு...
-
ஒன்னு கூடிட்டாங்க! நிஸான்-ஹோண்டா இணைவிற்கு இதுதான் காரணமா! ஜப்பான் பசங்க 2பேரும் ஒன்னு கூடி என்ன பண்ண போறாங்க!
-
மாலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு வந்தே பாரத் ரயிலில் ஏறினால் இரவு டின்னர் சாப்பிட பெங்களூரு போயிடலாம்!