Just In
- 4 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 4 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 6 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 7 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு... இந்தியாவின் மானத்தை வாங்கிய மாருதி சுஸுகி கார்... என்ன ஆச்சு தெரியுமா?
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பலேனோ காரின் மோதல் சோதனை முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) திகழ்கிறது. இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். இந்த செக்மெண்ட்டில் டாடா அல்ட்ராஸ் மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களுடன் மாருதி சுஸுகி பலேனோ போட்டியிட்டு கொண்டுள்ளது.
ஆனால் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் கார் என்றால், அது மாருதி சுஸுகி பலேனோதான். இது 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு ஆகும். குஜராத் மாநிலத்தில் உள்ள சுஸுகி நிறுவனத்தின் ஆலையில் பலேனோ கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு சப்ளை செய்யப்பட்டு, இந்தியாவில் பலேனோ விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இந்த சூழலில் 'மேட் இன் இந்தியா' சுஸுகி பலேனோ காரை, லத்தின் என்சிஏபி அமைப்பு (Latin NCAP) மோதல் சோதனைக்கு உட்படுத்தியது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த மோதல் சோதனையில் சுஸுகி பலேனோ 0 (பூஜ்ஜியம்) ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.
இந்தியாவை சேர்ந்த டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் கார்கள் தொடர்ச்சியாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தி வரும் நிலையில், 'மேட் இன் இந்தியா' சுஸுகி பலேனோ 0 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் 'மேட் இன் இந்தியா' சுஸுகி பலேனோ கார்தான் மோதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த கார் 0 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளதாக லத்தீன் என்சிஏபி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 20.03 சதவீதத்தையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 17.06 சதவீதத்தையும், பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் 64.06 சதவீதத்தையும், பாதுகாப்பு அஸிஸ்ட்டில் 6.98 சதவீதத்தையும் மட்டுமே சுஸுகி பலேனோ பெற்றது.
நாங்கள் ஏற்கனவே கூறியபடி 'மேட் இன் இந்தியா' டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளிலேயே அசத்தி வருகின்றன. இதுவரை டாடா நிறுவனத்தின் நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் பன்ச் ஆகிய மூன்று கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.
அதே நேரத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 காரும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. இவை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் என்பதால், இது இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் பெருமை என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பலேனோ 0 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியிருப்பது இந்தியாவிற்கும், சுஸுகி நிறுவனத்திற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் பலேனோவின் காரின் மிக முக்கிய போட்டியாளரான டாடா அல்ட்ராஸ் குளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சமீப காலமாக டாடா நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. பாதுகாப்பு தொடர்பாக வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் விழிப்புணர்வே இதற்கு முக்கியமான காரணம். முன்பெல்லாம் கார் வாங்கும்போது விலை, மைலேஜ், டிசைன், கலர் ஆகிய அம்சங்களைதான் வாடிக்கையாளர்கள் அதிகமாக பார்ப்பார்கள்.
ஆனால் தற்போது மோதல் சோதனைகளில் எத்தனை ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை கார் வாங்கியுள்ளது? என்பதையும் வாடிக்கையாளர்கள் பார்க்கின்றனர். இந்த விஷயத்தில் டாடா நிறுவனம் தொடர்ந்து அசத்தி வருவதால், அந்த நிறுவனத்தின் கார் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார்களில் ஒன்றான பன்ச் சமீபத்தில்தான் விற்பனைக்கு வந்தது.
இது மைக்ரோ எஸ்யூவி ரக கார் ஆகும். பாதுகாப்பில் தலைசிறந்து விளங்குவதால், நெக்ஸான், அல்ட்ராஸ் ஆகிய கார்களை போன்று பன்ச் காரும் விற்பனையில் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விலை குறைவான கார் என்பது கூடுதல் சிறப்பம்சம். வரும் காலங்களில் டாடா நிறுவனத்திடம் இருந்து இன்னும் நிறைய பாதுகாப்பான கார்களை நாம் எதிர்பார்க்கலாம்.
Note: Images used are for representational purpose only.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!