Just In
- 46 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பெட்ரோல், டீசல் ரேட் தாங்க முடியல... பேசாம எலெக்ட்ரிக் வண்டி வாங்கீரலாம்... இவ்ளோ மானியம் வேற தர்றாங்க!
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
திருத்தியமைக்கப்பட்ட எலெக்ட்ரிக் வாகன கொள்கையை மஹாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதன் கீழ் மானியங்களை வழங்குவதன் மூலம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு மஹாராஷ்டிரா அரசு சலுகைகளை வழங்கவுள்ளது.
மேலும் வரும் 2025ம் ஆண்டிற்குள், பதிவு செய்யப்படும் மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில், 10 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தேவை பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை பூர்த்தி செய்யும் விதமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் குறைந்தபட்சம் ஒரு ஜிகாபேக்டரியையாவது அமைக்க வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகம் 18,000 பேருந்துகளை வைத்துள்ளது. இதில் 15 சதவீத பேருந்துகளை, வரும் 2025ம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் முறைக்கு மாற்ற வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பவர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கும் மஹாராஷ்டிரா மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன் பேட்டரியின் ஒவ்வொரு kwh-க்கும் 5 ஆயிரம் ரூபாயை ஊக்க தொகையாக வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் டூவீலர் என்றால் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக கிடைக்கும்.
அதுவே எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனம் என்றால் அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. மேலும் வாகனங்களை ஸ்கிராப் செய்பவர்களுக்கு ஊக்க தொகையை வழங்குவதற்கு மஹாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து விலக்கு வழங்கப்படும்.
மஹாராஷ்டிரா மாநில அரசின் இந்த முயற்சியால், எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹாராஷ்டிரா மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை தற்போது ஊக்குவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், டெல்லி மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. டெல்லி மாநில அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏற்கனவே மானியம் வழங்கி வருகிறது. இதுதவிர கோவா மாநில அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்குவதற்கு தற்போது முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் 11,000 எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என ஒட்டுமொத்தமாக அடுத்த 5 ஆண்டுகளில் 55,000 எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்க கோவா அரசு திட்டமிட்டுள்ளது. மாநில அரசுகள் தவிர, ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்களை வழங்கி கொண்டுள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலமாக கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறையும் என்பது கூடுதல் சிறப்பம்சம். இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது மக்களின் கவனம் திரும்பி வருகிறது.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!