Just In
- 1 hr ago இந்தியாவில் சுஸுகி 2-வீலர்கள் உற்பத்தி 80 இலட்சத்தை கடந்தது!! தொழிற்சாலை எங்கு உள்ளது தெரியுமா?
- 2 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 3 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 4 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காரை இப்போ வாங்கிக்கோங்க, காசு பொறுமையா கட்டுங்க... மஹிந்திராவின் சிறப்பு திட்டம் அறிமுகம்...
கோவிட்-19 காலத்தில் விற்பனையை அதிகரிக்க சிறப்பு திட்டம் ஒன்றை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, இந்தியர்கள் மத்தியில் வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதவாது, காரை முன்னரே வழங்கிவிட்டு பின்னர் அதற்கான தொகையை மாத தவணையாக பெறும் திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது கோவிட்-19 வைரஸ் இரண்டாம் அலை பரவல் இந்தியாவில் கோர தாண்டவமாட்டம் ஆடி வருகின்றது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் முழு முடக்கம் அல்லது பகுதி நேர முடக்கம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இந்த நிலையால் வாகன விற்பனை மிகக் கடுமையாகச் சரிந்துள்ளது.
எனவே விற்பனையைத் தூக்கி நிறுத்தும் நோக்கில் மஹிந்திரா நிறுவனம் இந்த சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 'இப்போ வாங்கிக்கோங்க, அப்புறமா பணம் கட்டுங்க' (own now, pay later) எனும் திட்டத்தை இதற்காக மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் மஹிந்திரா வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் 90 நாட்களுக்கு பிறகு இஎம்ஐ-க்கான தொகையைச் செலுத்தினால் போதும். அதாவது, வாங்கிய நாளில் இருந்து 90 நாட்களுக்கு பின்னர் காருக்கான மாத தவணையைச் செலுத்தினால் போதும். இத்திட்டம் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் பொருந்தும் என கூறப்படுகின்றது.
ஆகையால், நிறுவனத்தின் எந்த தயாரிப்பின்மீது உங்களுக்கு விருப்பம் இருக்கின்றதோ அதை சுலப மாத தவணை திட்டத்தின்கீழ் நீங்கள் வாங்கலாம். இது வணிக பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பல தரப்பட்ட வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் இந்த திட்டத்தை மஹிந்திரா நாட்டில் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து, மாதத் தவணையில் கேஷ்பேக் மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் உள்ளிட்ட சலுகைகளையும் மஹிந்திரா தற்போது அறிவித்துள்ளது.
இத்திட்டம் குறித்த மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அல்லது இதன்கீழ் வாகனங்களை வாங்க விரும்பினால் தங்களின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தை அணுக மஹிந்திரா அறிவுறுத்தியுள்ளது. இல்லையெனில் ஷோரூம்களுக்கு விசிட் கொடுக்கலாம் என்றும் அது கூறியுள்ளது.
கடந்த 2021 மே மாத வாகன விற்பனை நிலவரம் தற்போது வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. இதன்படி, மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதம் கடும் விற்பனைச் சரிவைச் சந்திருப்பது தெரிய வந்துள்ளது. நிறுவனம், 2020 மே மாதத்தைக் காட்டிலும் 56 சதவீதம் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
8,004 யூனிட் வாகனங்களை மட்டுமே மஹிந்திரா கடந்த மாதம் உள்ளூர் சந்தையில் விற்பனைச் செய்திருக்கின்றது. இதற்கு முந்தைய மாதமான ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனம் 18,285 யூனிட் வாகனங்களை விற்பனைச் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த திடீர் விற்பனை சரிவிற்கு நாட்டையே புரட்டி போட்டு வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலே முக்கிய காரணம் ஆகும்.
இந்த நிலையிலேயே விற்பனையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் மஹிந்திரா நிறுவனம் சிறப்பு திட்டமான, இப்போது வாங்குங்கள், பொறுமையாக தொகையை செலுத்துங்கள் எனும் திட்டத்தை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியர்கள் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!