Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Movies தமன்னா அதற்கு செட் ஆகமாட்டார்.. ஓபனாக பேசிய இயக்குநர் லிங்குசாமி
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எக்ஸ்யூவி900 பெயரில் வருகிறது மஹிந்திராவின் முதல் கூபே ஸ்டைல் எஸ்யூவி?
மஹிந்திரா நிறுவனத்தின் முதல் கூபே ரக எஸ்யூவி கார் எக்ஸ்யூவி900 என்ற பெயரில் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட் என்ற பெருமையை தக்க வைத்து வரும் மஹிந்திரா நிறுவனம் தனது புதிய மாடல்களை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கி உள்ளது. டிசைனிலும், தொழில்நுட்பத்திலும் இந்த எஸ்யூவி மாடல்கள் உலகத் தரம் வாய்ந்ததவையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.
அந்த வகையில், எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு மாற்றாக புதிய மாடலை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த மாடல் எக்ஸ்யூவி700 என்ற பெயரில் அழைக்கப்படும்.
இதனைத்தொடர்ந்து, அடுத்து ஒரு கூபே ரக எஸ்யூவி மாடலையும் கொண்டு வர மஹிந்திரா முடிவு செய்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ என்ற கான்செப்ட் மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த மாடலானது எக்ஸ்யூவி500 அடிப்படையிலான கூபே ரக எஸ்யூவி மாடலாக உருவாக்கப்பட்டு இருந்தது. அதாவது, பின்புறத்தில் கூரை அமைப்பு தாழ்ந்து செல்லும் வகையில் கூபே மாடலாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இந்த மாடல் அப்போது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், இந்தியர்கள் மத்தியில் இந்த எஸ்யூவி கூபே ரக மாடல் எந்த அளவுக்கு எடுபடும் என்பதில் ஐயப்பாடு இருந்ததால், இந்த திட்டத்தை பரிசீலனை அளவிலேயே வைத்திருந்தது.
இந்த நிலையில், இந்த கூபே ரக எஸ்யூவியை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கு மஹிந்திரா பச்சைக் கொடி காட்டி இருப்பதாக ஆட்டோகார் இந்தியாதளத்தின் செய்தி தெரிவிக்கிறது.
விரைவில் வர இருக்கும் எக்ஸ்யூவி700 அடிப்படையிலான கூபே ரக எஸ்யூவி மாடலாக இந்த கார் உருவாக்கப்பட உள்ளது. அதாவது, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எகஸ்6 எஸ்யூவி கார் கூபே ரகத்திலான மாடலாக முதன்முதலில் வெளியிடப்பட்டது. இவை மிகவும் தனித்துவமானதாக பெரும் பணக்காரர்களை வசீகரித்து வருகிறது.
அந்த வகையில், இந்த எஸ்யூவியை கூபே ரக எஸ்யூவி பிரியர்களை கவரும் வகையில் நிலைநிறுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இந்த புதிய மாடலானது W620 என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த மாடலானது 4 டோர் கூபே மாடலாக இருக்கும். இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கலாம். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும். எனினும், வரும் 2024ம் ஆண்டுவாக்கில்தான் இந்த புதிய மாடல் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!