Just In
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்த மாருதி சுஸுகி!! கார்களின் விலைகள் ரூ.22,500 வரையில் அதிகரிப்பு!
குறிப்பிட்ட சில மாடல்களின் விலைகளை ரூ.22,500 வரையில் மாருதி சுஸுகி நிறுவனம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி நேற்று (ஏப்ரல் 16) அதன் குறிப்பிட்ட சில கார் மாடல்களின் விலைகளை ரூ.22,500 வரையில் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கான காரணமாக, வாகன தயாரிப்பு பணிகளுக்கும் ஆகும் செலவை மாருதி சுஸுகி நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. அதுவும் உண்மை தான், அலுமினியம், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்டவைகளின் மதிப்பு வருடந்தோறும் அதிகரித்து வருகிறது.
மேலும், கொரோனா வைரஸின் இரண்டாவது அலையினால் நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதுவும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சில விதங்களில் பண செலவு மற்றும் நேர செலவுகளை ஏற்படுத்துகிறது.
விலை அதிகரிப்பு அனைத்து மாடல்களிலும் 1.6 சதவீதம் என்ற அளவில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் மாருதியின் இந்த விலை அதிகரிப்பு நடவடிக்கையில் நிறுவனத்தின் செலிரியோ மற்றும் ஸ்விஃப்ட்டை தவிர்த்து மற்ற மாடல்கள் அனைத்தும் அடங்குகின்றன.
மாருதி சுஸுகி கார்கள் அரேனா ஷோரூம்களிலும், நெக்ஸா ப்ரீமியம் டீலர்ஷிப்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரேனா ஷோரூம்களில் விற்கப்படும் ஆல்டோ, வேகன்ஆர், டிசைர் மற்றும் எர்டிகா உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
அதேபோல் நெக்ஸா ப்ரீமியம் டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்படும் பலேனோ, எஸ்-க்ராஸ், சியாஸ் மற்றும் எக்ஸ்எல்6 கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதிகப்பட்சமாக இவற்றின் விலை ரூ.22,500 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது என்று மட்டுமே செய்திகள் வெளிவருகின்றன.
மற்றப்படி ஒவ்வொரு மாருதி காரின் விலையும் எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விரிவாக தகவல்கள் எதுவும் தற்போது அறிவிக்கப்படவில்லை. மிக விரைவில் அறிவிக்கப்படலாம்.
மாருதி நிறுவனம், கடந்த நிதியாண்டில் அதிகளவில் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இதில் ஸ்விஃப்ட், பலேனோ, வேகன்ஆர், ஆல்டோ மற்றும் டிசைர் உள்ளிட்டவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் கை கடந்த பொருளாதார ஆண்டில் ஓங்கியுள்ளது. இத்தனைக்கும் விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
கடைசியாக கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி இதே காரணத்திற்காக மாருதி கார்களின் விலைகள் ரூ.34,000 வரையில் உயர்த்தப்பட்டு இருந்தன. இந்த புதிய விலை அதிகரிப்பு இந்த ஏப்ரல் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350