Just In
- 22 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 6 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
Don't Miss!
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
2 நிமிஷம்தான்... காரை அக்குவேர்-ஆணிவேராக கழட்டி மீண்டும் மாட்டிய ராணுவ வீரர்கள்! சூப்பரான திறமை பற்றிய வீடியோ!
இந்திய எல்லை பாதுகாப்பு (BSF) வீரர்கள் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாக மாருதி சுசுகி ஜிப்ஸி (Maruti Suzuki Gypsy) எஸ்யூவி காரை அக்குவேர், ஆணி வேராக கழட்டி மாட்டும் புதிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்களின் அசாத்திய திறன் குறித்த வீடியோ மற்றும் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்திய வாகன உலகின் வரலாற்றில் மிகவும் முக்கியமான வரலாற்றைக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜிப்ஸி-யும் ஒன்று. இந்த காரையே நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் (Border Security Force) ராணுவ வீரர்கள் இரண்டே நிமிடங்களில் முழுவதுமாக கழட்டி, பின்னர், அதை மீண்டும் மாட்டி இருக்கின்றனர்.
அதாவது, காரை அக்குவேர், ஆணி வேராக கழட்டி பின்னர் மீண்டும் முழு காராக மாற்றியிருக்கின்றனர். ராணுவ வீரர்களின் இந்த தனித் திறமை குறித்த புதிய வீடியோவே தற்போது வெளியாகியிருக்கின்றது. வீடியோவில், மாருதி சுசுகி ஜிப்ஸி காரில் அமர்ந்து வரும் வீரர்கள், தீடிரென காரை நிறுத்தி கீழே இறங்குகின்றனர்.
தொடர்ந்து, ஒவ்வொரு வீரரும் சுறு சுறுப்பாக செயல்பட்டு காரின் அனைத்து பாகங்களையும் நீக்க தொடங்குகின்றனர். பானெட், கதவுகள், இருக்கைகள் என ஒன்றைகூட விடாமல் அனைத்தையும் அவர்கள் கழட்டினர். பின்னர், கழட்டியே அதே வேகத்தில் மீண்டும் உதிரிபாகங்களை அவர்கள் இணைக்கத் தொடங்கினர்.
இதனால், எலும்புக் கூடாக மாறிய மாருதி ஜிப்ஸி மீண்டும் காரின் உருவத்திற்கு வந்தது. அதுவும், முன்பு எப்படி நல்ல ஓடும் திறனில் அது காணப்பட்டதே அதே நிலைக்கு ராணுவ வீரர்கள் அதனைக் கொண்டு வந்தனர். இதற்காக அவர்கள் எடுத்து கொண்ட நேரம் வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே ஆகும். வீடியோ காட்சி 2 நிமிடங்கள் 18 செகண்டுகளைக் கொண்டிருக்கின்றது.
ஆனால், இதை உற்றுக் கவனத்தில் வீரர்கள் 2 நிமிடங்களுக்கு உள்ளாகவே, 1 நிமிடம் 47 செகண்டுகளில் காரை கழட்டி, மாட்டுவதை நம்மால் காண முடிகின்றது. இதில், அவர்கள் வருவதும், பின்னர், மீண்டும் புறப்படும் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதால் கூடுதல் கால அளவு கொண்டிருக்கின்றது.
மாருதி ஜிப்ஸி கரடு, முரடான பாதைகளுக்கு உகந்த வாகனமாக காட்சியளிக்கின்றது. எனவேதான் ராணுவத்தின் மிகவும் பிரியமான கார் மாடல்களில் முன்னணி இடத்தை இக்கார் பிடித்திருக்கின்றது. ராணுவம் மட்டுமின்றி நாட்டின் சில மாநில காவல்துறைகளும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றன.
இத்தகைய ஓர் காரையே எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முழுவதும் கழட்டி பின்னர் மீண்டும் மாட்டியிருக்கின்றனர். இந்த திறன் ராணுவ வீரர்கள் இந்த காரை எந்தளவிற்கு அறிந்திருக்கின்றனர் என்பதை விளக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
கராஜில் வைத்து கட்டமைக்க வேண்டிய ஓர் காரை பெரியளவில் உபகரணங்கள் இன்றி மைதானத்தில் வைத்து வீரர்கள் அக்குவேராக, ஆணி வேராக கழட்டி மாட்டியிருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அண்மையில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சி ஒன்றிலேயே வீரர்கள் இந்த சாகசத்தை செய்து காட்டியிருக்கின்றனர். நிகழ்வில் ராணுவ முக்கிய அதிகாரிகள், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
இக்காரை மாருதி சுசுகி நிறுவனம் முதன் முதலில் 1985ம் ஆண்டிலேயே இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இக்காருக்கு நாட்டில் வரவேற்பு சற்றே அதிகம். இருப்பினும், சில காரணங்களால் அண்மையில் இதன் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. கடைசியாக விற்பனையில் இருந்த ஜிப்ஸியில் 1.3 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் வழங்கப்பட்டது. 5 மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் அனைத்து வீல் இயங்கும் திறன்களுடன் இது கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.
2019ம் ஆண்டிலேயே இக்காரின் விற்பனையை நிறுத்தியது. பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து இதன் விற்பனை நிறுத்தப்பட்டது. தனி நபர்களுக்கான விற்பனை மட்டுமே நிறுத்தப்பட்டது. இப்போது, ராணுவ தேவைகளுக்காக இக்காரை நிறுவனம் உற்பத்தி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்டரின் பேரில் ஜிப்ஸியை உற்பத்தி செய்து மாருதி வழங்கி வருகின்றது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!