Just In
- 43 min ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 1 hr ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 1 hr ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 4 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
Maruti Suzuki நிறுவனத்திற்கு 200 கோடி ரூபா அபராதம்... ஏன் தெரியுமா?
Maruti Suzuki நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையம் ரூ. 200 கோடி அபராதம் வழங்கியிருக்கின்றது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.
நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் Maruti Suzuki-யும் ஒன்று. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என இந்தியாவில் எப்போதுமே ஓர் தனித்துவமான வரவேற்பு நிலவி வருகின்றது. எனவேதான் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் Maruti இன் தயாரிப்புகள் எப்போதுமே முதல் இடத்தைப் பிடிக்கின்றன.
இந்த மாதிரியான சூழ்நிலையில், இந்த பிரமாண்ட நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India) ஓர் மிகப் பெரிய தொகையை அபராதமாக விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபட்டதற்காக ரூ. 200 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதம் நடவடிக்கை குறித்து இந்திய போட்டி ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "Maruti Suzuki நிறுவனம் ஓர் ஒப்பந்தத்தின் வாயிலாக தனது டீலர்களைக் கட்டுப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது". அதாவது, டீலர்கள் சுதந்திரமாக தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்க நிறுவனம் ஓர் கட்டுப்பாட்டை வழங்கியதாகவும், மேலும், தங்களின் அனுமதி இன்றி எந்தவொரு சலுகைகையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கக் கூடாது என்றும் நிறுவனம் தனது டீலர்களைக் கட்டுப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபட்டதற்காகவே Maruti Suzuki நிறுவனத்திற்கு மாபெரும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Maruti Suzuki நிறுவனத்தால் போடப்பட்ட ஒப்பந்தமானது, அவர்கள் பரிந்துரைத்ததைத் தாண்டி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடியை வழங்குவதைத் தவிர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
இதனைக் கண்கானித்த பெருநிறுவன விவகார அமைச்சகம் இத்தகைய நடவடிக்கைக்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கில் மிகப் பெரிய அபராதத் தொகையை மாருதிக்கு வழங்கியிருக்கின்றது. மாருதியின் இந்த செயல் நுகர்வோரைப் பாதிக்கும் ஓர் செயலாகும். மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள், சலுகைகள் மற்றும் இலவசங்களை வழங்க நிறுவனம் அனுமதிக்கவில்லை.
இவற்றை வழங்க வேண்டுமானால் தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஓர் விற்பனைக்கு எதிரான விரோத ஒப்பந்தத்திலேயே நிறுவனம் தங்களின் விற்பனையாளர்களிடத்தில் கையொப்பம் வாங்கியிருக்கின்றது. இதனை மீறி செயல்படும் விற்பனையாளர்கள் மீது Maruti Suzuki நிறுவனம் சில கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சகம் தெரிவிக்கின்றது.
விற்பனையாளர் பிரதிநிதி, மேனேஜர் மற்றும் குழு தலைவர் ஆகியோரைகூட விட்டு வைக்காமல் Maruti Suzuki நிறுவனம் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இதுபோன்று முற்றிலும் நியாயமற்ற வணிக செயல்பாட்டில் Maruti ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த இந்தியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Maruti Suzuki நிறுவனம் சலுகைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மட்டும் ஈடுபடவில்லை. தனியாக ஓர் குழு அமைத்து அதன் வாயிலாக பெரியளவு அபராதம் வழங்குதல், அச்சுறுத்தலை வழங்குதல் மற்றும் விநியோகத்தை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான செயல்களிலும் நிறுவனம் ஈடுபட்டிருக்கின்றது.
Maruti இன் இந்த செயல் இந்திய போட்டி ஆணையம் (CCI)-ஆல் உருவாக்கப்பட்ட பிரிவு 3 (4) (e) பிரிவு 3 (1) 2002 ஆகியவற்றிற்கு எதிரானவை ஆகும். இதன் அடிப்படையிலேயே Maruti நிர்வாகத்தின்மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..