புதிய அவதாரத்தில் உருவாகியுள்ள Celerio காருக்கான புக்கிங் பணிகள் தொடக்கம்! ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருக்கோம்
புதுப்பித்தல்களுடன் புதிய அவதாரத்தில் உருவாகி இருக்கும் மாருதி சுசுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) காருக்கான புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதுகுறித்த முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

புதிய அவதாரத்தில் உருவாகியிருக்கும் மாருதி சுசுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) கார் மாடல் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது. இதனை முன்னிட்டு உற்பத்தியாளர் இக்காருக்கான புக்கிங் பணிகளை இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த முழு விபரத்தையும் இந்த பதிவில் காணலாம், வாங்க.

மாருதி சுசுகி நிறுவனம் அதன் பிரபல செலிரியோ கார் மாடலை புதிய அவதாரத்தில் உருவாக்கி இருக்கின்றது. மிக விரைவில் இக்காரை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகையை முன்னிட்டு மாருதி சுசுகி புக்கிங் பணிகளை இந்தியாவில் தொடங்கி வைத்திருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் கார் மாடல்களில் மாருதி சுசுகியின் சொலிரியோவும் ஒன்று. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் செமிகன்டக்டர் சிப் (Semiconductor Chip)-களின் பற்றாக்குறை ஆகியவற்றால் இதன் அறிமுகம் தள்ளிபோய் வந்த நிலையில் மிக விரைவில் இறுதியாக தற்போது அறிமுகத்திற்கான சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்தே புதிய அவதாரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் செலிரியோ காருக்கான புக்கிங்கை மாருதி சுசுகி இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. பன்முக புதுப்பித்தல்களை புதிய செலிரியோ பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிப்புறம், உட்புறம் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆகையால், புதிய செலிரியோவிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இதற்கே, புதிய பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் அதிக துடிப்பான ஸ்டைலிலும் இக்கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த நிலையிலேயே தற்போது நிறுவனம் அதிகாரப்பூர்வமாக புக்கிங் பணிகளைத் தொடங்கியுள்ளது.

அதேநேரத்தில் புதிய செலிரியோவில் என்ன மாதிரியான மாற்றங்களை நிறுவனம் செய்திருக்கின்றது என்பது பற்றிய தகவலை இதுவரை நிறுவனம் வெளியிடவில்லை. அவற்றை இன்னும் சில தினங்கள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த சில தினங்களாகவே மாருதி சுசுகி நிறுவனம் அதன் புதிய செலிரியோ காரை இந்திய சாலையில் வைத்து பலபரீட்சைக்கு உட்படுத்தி வருகின்றது. பல மாதங்களாக இதன் சோதனையோட்டம் நடைபெற்று வரும்நிலையில் மிக விரைவில் இந்த கார் பல்வேறு புதுப்பித்தல் அம்சங்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது.

முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் அதிக விசாலமான இட வசதி, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி கொண்ட நவீன ரக தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், அப்டேட்டான மைய கன்சோல் மற்றும் டேஸ்போர்டு உள்ளிட்டவையும் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இத்துடன், நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செமி கன்டக்டர் பற்றாக்குறை காரணமாக இந்த காரின் அறிமுகம் கால தாமதாக செய்யப்படுகின்றது. இதுமட்டுமின்றி, செமி கன்டக்டர் பற்றாக்குறையால் அண்மையில் மாருதி சுசுகி நிறுவனம், அதன் வாகன உற்பத்தியை 60 சதவீதம் வரை குறைத்தது குறிப்பிடத்தகுந்தது. இதனால் உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை டெலிவரி செய்வதில் லேசாக சிக்கலைச் சந்தித்து வருகின்றது.

புதிய செலிரியோ கார் நடப்பாண்டிற்கு உள்ளாகவே விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏன்?, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்னும் ஒரு சில தினங்களில் இக்காரின் அறிமுகம் அரங்கேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்கின்றனர் வாகத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள். ஆனால், மாருதி சுசுகி நிறுவனம் என்ன மாதிரியான முடிவை எடுக்க இருக்கிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மாருதி சுசுகி நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் எந்த ஒரு புதிய தயாரிப்பையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. எனவே, நிறுவனத்தின் ஜிம்னி எஸ்யூவி கார் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என மாருதி கார் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், இக்காரின் வருகைகுறிந்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை நிறுவனம் வெளியிடாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் வருகை இந்தியாவில் அமையும் என்றால் மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யவிக்கு கடும் போட்டியாக அமையும்.


Click it and Unblock the Notifications








