Just In
- 3 min ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 44 min ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 3 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 3 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
Don't Miss!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Movies அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்.. செம ட்விஸ்ட்!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாதம் 1.5 லட்ச கார்களை விற்கும் நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! வாகன தயாரிப்பை 60% குறைக்கும் மாருதி சுஸுகி
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) இந்த செப்டம்பர் மாதத்தில் வாகன தயாரிப்பை சுமார் 60 சதவீதம் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
குஜராத்தில் உள்ள மாருதி சுஸுகியின் தொழிற்சாலையில் தயாரிப்பு பணிகள் முன்பாக இதேபோன்று குறைக்கப்பட்டு இருந்தது. தற்போது குருக்ராம் மற்றும் மனேசார் தொழிற்சாலைகளில் வாகன தயாரிப்பு பணிகள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை கிட்டத்தட்ட 60 சதவீதம் (பாதிக்கு மேல்) மாருதி சுஸுகி தொழிற்சாலையில் தயாரிப்பு பணிகள் குறைக்கப்பட உள்ளன. இந்த 60% தயாரிப்பு பணிகள் குறைக்கப்படுவதற்கு காரணம், குறைக்கடத்திகளுக்கு உலகளவில் ஏற்பட்டுவரும் தேவையால், இந்தியாவில் மின்னணு கூறுகளுக்கு உருவாகியுள்ள தேவையே ஆகும்.
இதனால் மேற்கூறப்பட்ட இரு பகுதிகளில் உள்ள மாருதி சுஸுகி தொழிற்சாலை பணிகள் வழக்கத்தை காட்டிலும் 40 சதவீதமாக குறையவுள்ளன. அதாவது இந்த இந்தியாவின் நம்பர் 1 கார் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு பணிகள் இந்த செப்டம்பர் மாதத்தில் பாதிக்கு மேல் குறையவுள்ளது.
கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இந்தியாவில் வாகன உற்பத்தி வேகமெடுத்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 1,70,719 கார்களை மாருதி நிறுவனம் தயார் செய்திருந்தது. ஆனால் கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் 1,33,520 கார்களையே இந்த நிறுவனம் தயாரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த வகையில் பார்த்தோமேயானால், மாருதி சுஸுகி வாகனங்களின் தயாரிப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 22 சதவீதம் குறைந்துள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் 60% குறைய போகிறது என்றால், மாருதி சுஸுகி நிறுவனம் இந்த மாதத்தில் தயாரிக்கவுள்ள வாகனங்களின் எண்ணிக்கை 68,000 என்ற அளவில் தான் வரும்.
இது நிச்சயம் வரப்போகும் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மாருதி கார்களின் விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது, வாகனத்தை முன்பதிவு செய்து காத்திருப்பதற்கான கால அளவு அதிகரிப்பட உள்ளதால் வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த நாளில் தங்களது காரினை டெலிவிரி எடுக்க முடியாமல் போகலாம்.
இவ்வளவு ஏன், சில கார்களின் சில வேரியண்ட்கள், சில டீலர்ஷிப் மையங்களில் கிடைக்காமல் கூட போகலாம். சிப்ஸ் (chips) பற்றாக்குறை தங்களது தயாரிப்பு பணிகளுக்கு தடையாக உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்த மாருதியின் முதன்மை நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தா இதுகுறித்து மேலும் பேசுகையில், குறைக்கடத்திகளின் பற்றாக்குறை செப்டம்பர் மாதத்திற்கும் நீடிக்கும்.
இதனால் இப்பொழுதில் இருந்து விநியோகம் தேவையை விட பின்தங்கி இருக்கும் என்று தெரிகிறது என கூறினார். மாருதியின் தற்போதைய பங்கு நிலை 20 நாட்களில் உள்ளது மற்றும் சிறந்த சரக்கு நிலை 30 நாட்களுக்கு மேல் உள்ளது. குறைந்த குறைக்கடத்தி சில்லுகளை பயன்படுத்தும் ஒரு மாறுப்பாடான உற்பத்தி முறையை கொண்டுவருவதன் மூலமாகவே இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும் என்பதில் மாருதி சுஸுகி தெளிவாக உள்ளது.
உதாரணத்திற்கு மாருதியின் மலிவான ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்றான ஆல்டோவின் டாப் ட்ரிம் நிலையாக விளங்கிய விஎக்ஸ்ஐ+ -இல் அதிகளவில் சிப்கள் பயன்படுத்தப்பட்டன. இதனாலேயே ஆல்டோவின் இந்த டாப் ட்ரிம் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து விற்பனையில் இல்லை.
ஆல்டோவை அதிக விலையில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் விஎக்ஸ்ஐ+ ட்ரிம்-மிற்கு அடுத்ததாக உள்ள விஎக்ஸ்ஐ ட்ரிம்-ஐ வாங்க வைக்கப்படுகின்றனர். இதேபோன்று தான் டிசைரின் டாப் வேரியண்ட்களான இசட்.எக்ஸ்.ஐ+ மற்றும் இசட்.எக்ஸ்.ஐ-இன் விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நிறுத்தி கொள்ளப்பட்டது.
குறைக்கடத்திகளை விநியோகம் செய்யும் முதன்மையான நிறுவனங்களுள் ஒன்றான போஸ்ச் (Bosch) மலேசியாவில் உள்ள அதன் தொழிற்சாலையை மூடி இருந்தது. மாருதிக்கு குறைக்கடத்திகளை விநியோகம் செய்யும் முதன்மையான நிறுவனங்களுள் ஒன்றாக இது உள்ளது. மாருதி தலைவர் ஆர்சி பார்கவாவின் கருத்துப்படி, இந்த நெருக்கடி 2022 இறுதி வரை நீடிக்கும்.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..