Just In
- 17 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 1 hr ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- News போட்டு கொடுத்த உறவினர்? ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் -உதவியாளருக்கு சம்மன்! பின்னணி
- Movies மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?.. மெகா ஹிட் பார்சலோ
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
வெற்றி பெற முடியாது... ரஜினியை போல் பின் வாங்கியது மாருதி சுஸுகி... வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் திட்டம் ரத்து?
மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது பல முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. கடும் குளிர் நிலவும் மலை பிரதேசங்கள் உள்பட இந்தியாவின் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை மாருதி சுஸுகி நிறுவனம் சாலை சோதனையில் ஈடுபடுத்தி வந்தது.
2020ம் ஆண்டிலேயே வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. கொரோனா வைரஸ் பிரச்னைதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதன்பின் நடப்பு 2021ம் ஆண்டில் மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன.
ஆனால் இந்த எலெக்ட்ரிக் காரை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தவர்களுக்கு தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், இந்தியாவில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது கிடப்பில் போட்டுள்ளதாக ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் நிரந்தரமாக ரத்து செய்து விட்டதா? அல்லது தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளதா? என்பதும் உறுதியாக தெரியவில்லை.
வணிக ரீதியில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருப்பதன் காரணமாகவே மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் திட்டத்தை தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரில் இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டிய சூழல் காணப்படுகிறது.
இது உற்பத்தி செலவு அதிகரிப்பிற்கு வழிவகுத்து விடும். உற்பத்தி செலவுகள் அதிகரித்தால், பெரிய விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் வகையில் விலையை பொருத்தமாக நிர்ணயம் செய்வது சவாலான காரியமாக மாறிவிடும். இந்திய சந்தையை பொறுத்தவரை விலை நிர்ணயம் சரியாக இல்லாவிட்டால் ஒரு கார் வணிக ரீதியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.
எனவே வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சரியான விலையில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வர முடியுமா? என்ற தயக்கம் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் ஒவ்வொரு மாதமும் மிக பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி வருகின்றன.
ஒரு சில கார்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனை எண்ணிக்கையை சர்வ சாதாரணமாக பதிவு செய்கின்றன. எனவே மிகவும் குறைவான விற்பனை எண்ணிக்கையைதான் ஈட்டும் என்றால், வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வர மாருதி சுஸுகி நிறுவனம் விரும்பாது.
ஆனால் வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையிலும், மனேசரில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அருகே அதன் சோதனை ஓட்டம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!