Just In
- 22 min ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 2 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 7 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 7 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
Don't Miss!
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாடிக்கையாளர்களுக்கு நேரடி கார் விற்பனை... மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு!
வெளிப்படைத்தன்மையுடன் வாடிக்கையாளர்களுக்கு நேரடி கார் விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஒரே குடையின் கீழ் தனது கார் விற்பனையை கொண்டு வரும் முயற்சியாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மையை தரும் வகையிலும், டீலர்கள் பாதிக்கப்படாத வகையிலும் அனைத்து தரப்பிலும் நன்மை பெறும் வகையில் இந்த புதிய விற்பனை திட்டம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த திட்டம் அதிக வெளிப்படைத்தன்மை கொண்ட விற்பனை சூழலை உருவாக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் Retail Of The Future (ROTF) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அனைத்து புதிய கார்களையும் நேரடியாக புக்கிங் செய்து வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
இருப்பில் உள்ள அனைத்து கார்களும் புக்கிங் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும். இந்த திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் சரியான விலையில் கார்களை வாங்கும் வாய்ப்பை பெற முடியும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரே விலையில் காரை வாங்குவதற்கு இந்த திட்டம் உறுதி செய்யும்.
அதேபோன்று, டீலர்கள் பாதிக்கப்படாத வகையிலும் இந்த திட்டம் இருக்கும். அதாவது, கார் விற்பனையை அதிகரிக்கும் சூழலை உருவாக்குதல், டெலிவிரி மற்றும் வாடிக்கையாளர்கள் சேவை உள்ளிட்டப் பணிகளுக்காக டீலர்களுக்கு குறிப்பிட்ட தொகையை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழங்கும்.
இந்த திட்டத்தின் மூலமாக, டீலர்களில் கார் இருப்பில் தேங்குவது முற்றிலுமாக தவிர்க்கப்படும். இதனால், பொருளாதார ரீதியில் டீலர்கள் பாதிக்கப்படுவதும் தவிர்க்கப்படும். குறிப்பாக, கொரோனாவுக்கு பிந்தைய இந்த காலக்கட்டத்தில் டீலர்களுக்கான பொருளாதார பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் அமையும்.
அதேநேரத்தில், புதிய கார்களை விற்பனை செய்வதற்கான மார்க்கெட்டிங் பணிகளை தொடர்ந்து செய்ய முடியும். ஆனால், வாடிக்கையாளர்கள் நேரடியாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடம் இருந்து புக்கிங் செய்து காரை வாங்க முடியும்.
நடப்பு ஆண்டின் நான்காவது காலாண்டு காலத்தில், அதாவது, அக்டோபர் - டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் இந்த திட்டத்தை இந்தியாவில் அமலுக்கு கொண்டு வருவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் புதிய கார்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!