Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 8 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான்!! புதிய விலைகளில் அறிமுகம்
உலகின் சிறந்த காராக விளங்கும் எஸ்-க்ளாஸ் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு முதன்முறையாக இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அதன் அல்ட்ரா-லக்சரி செடான் காரான எஸ்-க்ளாஸை மேட்-இன்-இந்தியா தயாரிப்பாக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் புனே, சாகான் தொழிற்சாலையில் புதிய எஸ்-க்ளாஸையும் சேர்த்து தற்சமயம் 13 மாடல்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த தொழிற்சாலையில் இதுவரையில் 1.3 லட்ச பென்ஸ் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடர்ன் தகவல்கள் தொழிற்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் 'கார் டூ எக்ஸ்' தொடர்புகளை கொண்ட காராக புதிய எஸ்-க்ளாஸ் முதல்முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்ய்ப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ள புதிய எஸ்-கிளாஸின் ஆரம்ப விலை (350டி வேரியண்ட்) ரூ.1.57 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த லக்சரி செடான் காரின் அதிகப்பட்ச விலையாக எஸ்-கிளாஸ் எஸ்450 வேரியண்ட்டிற்கு ரூ.1.62 கோடி கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுவரையில் சிபியூ முறையில், அதாவது முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்டு இந்த மெர்சிடிஸ் லக்சரி செடான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இனி இந்தியாவிலேயே எஸ்-க்ளாஸ் தயாரிக்கப்பட உள்ளதால், இதன் விலைகள் கவனிக்கத்தக்க அளவில் குறைந்துள்ளன. அதேபோல் சிபியூ மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய எஸ்-க்ளாஸ் சில மாற்றங்களை ஏற்றுள்ளது.
குறிப்பாக புதிய எஸ்-க்ளாஸின் உட்புற கேபின் பிரிவில்-சிறந்த தொழிற்நுட்பங்களுடன் மிக புத்துணர்ச்சியான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஏற்கனவே டீசர் மூலமாக மெர்சிடிஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது. தற்சமயம் தங்களது அதிகளவில் விற்பனை செய்யப்படும் கார்களாக இ-கிளாஸ் மற்றும் ஜிஎல்சி தொடர்வதாக மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான மார்டின் ஸ்வெங்க் தெரிவித்துள்ளார்.
சிபியூ எஸ்-கிளாஸ் வெர்சனில் வழங்கப்பட்ட பெரும்பாலான வசதிகள் மற்றும் என்ஜின் தேர்வுகள் புதிய தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் காரிலும் தொடரப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் கடந்த 9 மாதங்களில் (2021 ஜனவரி- செப்டம்பர்) மெர்சிடிஸ் நிறுவனம் மொத்தம் 8,958 கார்களை விற்பனை செய்துள்ளது.
மிக முக்கிய அப்டேட்டாக, சிபியூ செர்சனில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஎம்ஜி லைனிற்கு மாற்றாக வழக்கமான எஸ்-கிளாஸ் மாடல் தான் தற்போது இந்திய வாடிக்கையாளர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இவை இரண்டிற்கும் தோற்றத்தில் வித்தியாசமாக, முன்பக்க பம்பரின் வடிவம் திருத்தியமைக்கப்பட்டு, தற்போது கூடுதலாக க்ரோம் தொடுதல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதேபோல் அலாய் சக்கரங்களின் வடிவமும் சிறியதாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாத மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை எஸ்-கிளாஸ் செடான் (சிபியூ முறையில்) கார் ஆர்வலர்களிடையே மிக பெரிய கவனத்தை பெற்றது. இதனால் சமூக ஊடகங்கள் இந்த பென்ஸ் காரினை புகழ்ந்து, 'உலகின் சிறந்த கார்' என செய்திகள் வெளியிட்டன.
உண்மையில், மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த லக்சரி கார் என்ற விருதை பெற்றுள்ளது இங்கு நினைவுக்கூரத்தக்கது. இந்த லக்சரி செடான் காருக்கு இந்தியாவில் கிடைத்த இந்த அதிகப்படியான வரவேற்பினை பார்த்துதான் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்த காரினை இந்தியாவிலேயே தயாரிக்கும் முடிவிற்கு வந்தது.
தற்சமயம் புதிய தலைமுறை உடன் விற்பனை செய்யப்படும் எஸ்-கிளாஸ் மாடல் எப்போதும் ஆட்டோமொபைல் துறையில் புதிய ஸ்டாண்டர்டை உருவாக்க கூடியது. இத்தகைய கார் இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட உள்ளது, மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவன குழுவினருக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
புதிய எஸ்-கிளாஸை மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மார்டின் ஸ்வெங்க் மற்றும் பியூஷ் அரோரா ஆகியோர் டிஜிட்டல் ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது வெளியிட்டுள்ளனர். முன்னதாக 2021 எஸ்-கிளாஸ் எஸ்450 4மேட்டிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.17 கோடியாகவும், எஸ்450 4மேட்டிக் காரின் விலை ரூ.2.19 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய எஸ்-கிளாஸ் எஸ்350டி 4மேட்டிக் வேரியண்ட்டில் 2925சிசி இன்லைன் 6-சிலிண்டர் என்ஜினும், எஸ்450 4மேட்டிக் வேரியண்ட்டில் 2999சிசி, இன்லைன் 6-சிலிண்டர் என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு லக்சரி செடான் கார்களின் டாப்-ஸ்பீடு 250kmph ஆகும்.