Just In
- 10 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 54 min ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 1 hr ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Movies மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?.. மெகா ஹிட் பார்சலோ
- News வெறும் 15 நிமிடம் தான்.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் பலி.. என்ன நடந்தது?
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
50 புத்தம் புதிய பென்ஸ் வேன்களை துவம்சம் செய்த ஊழியர்! காரணத்தை கேட்டா மிரண்டுருவீங்க... புத்தாண்டில் சோகம்!
உற்பத்தி ஆலையில் ஜேசிபி எந்திரத்துடன் நுழைந்த ஊழியர் கண்மூடித்தனமாக 50க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றார். இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.
பென்ஸ் நிறுவனத்திற்கும், ஊழியருக்கும் ஏற்பட்ட மோதல் தற்போது 50 புதிய சொகுசு வேன்கள் நொறுங்கியதில் முடிவடைந்துள்ளது. அண்மையில் நிறுவனத்திற்கே தெரியமால் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டதன் காரணத்தினால் ஸ்பெயின் நாட்டில் செயல்பட்டு வரும் உற்பத்தி ஆலையில் இருந்து பணியாளர் ஒருவரை பென்ஸ் வெளியேற்றியது.
இதனால் ஏற்பட்ட மோதலின் காரணத்தினாலயே அந்த முன்னாள் ஊழியர் பென்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட சொகுசு வேன்களை புல்டவுசர் எனப்படும் ஜேசிபி எந்திரத்தைக் கொண்டு அடித்து நொறுக்கியிருக்கின்றார். 2020ம் ஆண்டின் கடைசி நாளில் ஊழியர் நிறுவனத்தை விட்டுவெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
Image Courtesy: Irlandarra/Twitter
அன்றைய தினமே இத்தகைய விரோத செயலில் முன்னாள் பணியாளர் ஈடுபட்டிருக்கின்றார். நிறுவனம் மற்றும் ஊழியருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பற்றிய தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், பல முறை எச்சரிக்கை பின்னரே அப்பணியாளர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகிழக்கு ஸ்பெயினில் செயல்பட்டு வரும் இந்த உற்பத்தி ஆலை பிரத்யேகமாக சொகுசு வேன்களையே அதிகளவில் உற்பத்தி செய்து வருகின்றது. இதுவே பென்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் மிகப் பெரிய உற்பத்தி ஆலை ஆகும். இந்த ஆலையிலேயே அத்துமீறி நுழைந்த முன்னாள் ஊழியர் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து வாகனங்களையும் நொறுக்கியிருக்கின்றார்.
வாகனங்களை நொறுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி வாகனம்கூட திருடப்பட்ட வாகனம் என கூறப்படுகின்றது. இதனை ஸ்பெயினின் உள்ளூர் ஊடகம் தெரிவித்திருக்கின்றது. மேலும், சம்பவம் நடந்தபோது நள்ளிரவு 1 மணி இருக்கும் என்று அப்போது ஆலையில் பணியாற்றிய பாதுகாவலர்கள் கூறுகின்றனர். அந்த நேரத்தில் சொற்பளவிலான பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மட்டுமே பணியாற்றியிருக்கின்றனர்.
ஆகையாலே அந்த நபரைக் கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாவலர்கள் திணறியிருக்கின்றனர். இந்த நிலையிலேயே துப்பாக்கி முனையில் அவரை பிடித்து பாதுகாவலர்கள் போலீஸிடத்தில் ஒப்படைத்தனர். நொறுக்கப்பட்ட அனைத்து வேன்களும் புத்தம் புதிய சொகுசு வாகனங்கள் ஆகும். அவை, வி கிளாஸ் மற்றும் விடோ வேன்கள் ஆகும்.
கடந்த 2020ம் ஆண்டைப் போன்று இந்த புத்தாண்டும் இருந்து விடக்கூடாது என்பதே அனைவரின் எண்ணமுமாக இருக்கின்றது. இந்த நிலையிலேயே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு இத்தகைய துரதிர்ஷ்ட வசமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. மேலும், அத்துமீறிய முன்னாள் பணியாளரால் சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது.
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!