கொரோனாவிடம் இருந்து ஊழியர்களை காப்பாற்ற அதிரடி அறிவிப்பு வெளியிட்ட கார் நிறுவனம்... நீங்க ரொம்ப நல்லவங்க!
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி, அதன் ஊழியர்களைக் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றுவதற்காக அதிரடி நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்து ஒரு வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இருப்பினும், இதன் தாக்கம் தற்போதும் நீங்காத நிலையில் இருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் மீண்டும் மீக தீவிரமாக வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், மீண்டும் பொதுமுடக்கம் அமலுக்கு வருமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் தனது ஊழியர்களைக் கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாப்பதற்காக சிறப்பு நடவடிக்கை ஒன்றை எடுக்க இருப்பதாக எம்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து காப்பாற்றும் விதமாக அனைத்து ஊழியர்களுக்கும் வைரஸ் தடுப்பு மருந்து போடப்பட இருப்பதாக எம்ஜி கூறியுள்ளது.

இலவசமாகவே இந்த தடுப்பூசிகளை தனது ஊழியர்களுக்கு வழங்க எம்ஜி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரவிக்கின்றன. இதனை அனைவருக்கும் கட்டாயம் என நிறுவனம் அறிவிக்கவில்லை. தாமாக முன் வந்து இதனைப் பயன்படுத்துக் கொள்ளுமாறு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேசமயம், தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள நிறுவனம் அதன் ஊழியர்களை ஊக்குவிக்கவும் செய்து வருகின்றது. ஆகையால், அனைவரும் இந்த தடுப்பூசியின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், எம்ஜி நிறுவனம் தனது நிறுவன ஊழியர்களை மட்டுமின்றி டீலர் பார்ட்னர்கள், ஒப்பந்தாரர்கள் மற்றும் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் பிற நிறுவனங்களையும் கோவிட்-19 வைரஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் இந்த சேவையை எம்ஜி வழங்க இருக்கிந்றது. இதனடிப்படையிலேயே குருகிராம் மற்றும் ஹலோல் உற்பத்தி ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட இருக்கின்றன.

எம்ஜி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டிலேயே இந்தியாவில் முதல் முறையாக கால் தடம் பதித்தது. ஆனால், இதுபெற்றிருக்கும் வளர்ச்சியோ அபரிதமானது. நாட்டின் முன்னணி நிறுவனங்களான டாடா, மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுக்கு கடுமையான டஃப் கொடுக்கும் வகையில் இந்நிறுவனம் வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

இத்தகைய சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து நாட்டில் பல முன்னோடியான செயல்களை நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், அண்மையில் ஹெக்டர் எஸ்யூவி கார் அடிப்படையிலான ஆம்புலன்ஸ்களை நாஞ்சியா மருத்துவமனைக்கு நிறுவனம் வழங்கியது. ஒட்டுமொத்தமாக ஐந்து ஆம்புலன்ஸ் கார்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

அமோகமான விற்பனையின் காரணமாக இந்த கார் தயாரிப்பு நிறுவனம் அண்மையில் கார் உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியது. இந்த நிறுவனம், 50,000மாவது யூனிட் கார் தயாரிப்பை அண்மையில் இந்தியாவில் செய்தது. கால் தடம் பதித்த மிக குறுகிய காலத்தில் இத்தகைய வளர்ச்சியை எம்ஜி பெற்றது இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

எம்ஜி நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவி ரக காரையே இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இந்த கார் மாடலே இந்தியாவில் இந்நிறுவனம் வலுவாக காலூன்ற காரணமாக அமைந்தது. இக்காரைத் தொடர்ந்தே ஹெக்டர் ப்ளஸ், இசட்எஸ் இவி (மின்சார கார்) மற்றும் குளோஸ்டர் (தன்னாட்சி வசதிக் கொண்ட இந்தியாவின் முதல்) ஆகிய மாடல்களை நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தயது.

இந்த கார்களின் வாயிலாகவும் இந்தியாவில் நற்மதிப்பெண்ணை நிறுவனம் பெற்று வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் இந்தியர்களின் மனதை வெல்லும் வகையில் அதன் பணியாளர்களுக்கு இலவச வைரஸ் தடுப்பு மருந்துகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








