Just In
- 15 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 31 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 51 min ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 1 hr ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
Don't Miss!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- News மாலை 71%.. இரவு 12 மணிக்கு 64% ! ஏறி இறங்கிய வாக்குச் சதவீதம்! நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
கொரோனா தீவிரம் எதிரொலி... எம்ஜி நிறுவனத்தின் ஹலோல் கார் ஆலை ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது
கொரோனா பரவல் காரணமாக, எம்ஜி நிறுவனத்தின் ஹலோல் கார் ஆலை ஒரு வாரத்திற்கு மூடப்பட உள்ளது. இதனால், எம்ஜி கார்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதுடன், காத்திருப்பு காலம் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால், பல இடங்களில் அசாரணமான சூழலில் மக்கள் தவித்து வருகின்றனர். மருத்துவமனைகளிலும் போதிய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், மருத்துவம் பார்க்கக்கூட முடியாத நிலையில், பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் அவலமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக, ஆயிரகணக்கானோர் பணிபுரியும் பல முன்னணி நிறுவனங்களின் வாகன உற்பத்தி ஆலைகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டு வருகிறது. அந்த வகையில், எம்ஜி மோட்டார் நிறுவனமும் குஜராத் மாநிலம், ஹலோல் பகுதியில் உள்ள தனது கார் ஆலையை ஒரு வாரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளது.
வரும் 29ந் தேதி முதல் மே 5ந் தேதி வரை ஹலோல் கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறி இருக்கிறார். அம்மாநில அரசு வேண்டுகோளுக்கு இணங்க கொரோனா சங்கிலித் தொடரை உடைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மோசமான தருணத்தில் பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும், அவர்கள் நலன் கருதியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராஜீவ் சாபா குறிப்பிட்டுள்ளார்.
கார்களுக்கான உதிரிபாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள், உற்பத்தி செய்த உதிபாகங்களை இருப்பில் வைக்குமாறும், ஹலோல் ஆலையில் கார் உற்பத்தித் துவங்கியவுடன் சப்ளையை தொடரலாம் என்றும் எம்ஜி மோட்டார் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏற்கனவே செமி கன்டக்டர் எனப்படும் கார்களுக்கு தேவையான மிக முக்கிய மின்னணு சாதனத்தின் தட்டுப்பாட்டால் வாகன உற்பத்தியில் பெரும் தடங்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது கொரோனா மீண்டும் வேலையைக் காட்டி வருவதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கும் நிலையில் உள்ளன.
செமி கன்டக்டர் பிரச்னையால் ஏற்கனவே எம்ஜி கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனாவும் சேர்ந்து கொண்டு ஆட்டம் போடுகிறது. இதனால், வாகன நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...