Just In
- 11 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இதுக்குகூட சிபாரிசா! இந்திய அளவில் வைரலாகும் பாஜக எம்பியின் சிபாரிசு கடிதம்... எதுவும் சொல்றதுக்கு இல்ல!!
பாஜக எம்பி ஒருவர் எழுதிய சிபாரிசு கடிதம் நாடு முழுவதும் வைரலாகத் தொடங்கியுள்ளது. அப்படி என்ன கடிதம் அது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக)-யின் பாராளுமன்ற உறுப்பினர் சன்னி தியோல். இவர் பஞ்சாப் மாநிலத்தின் குர்தஸ்புர் தொகுதியின் எம்பி ஆவார். இவர் அண்மையில் எழுதிய சிபாரிசு கடிதம் ஒன்றே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
அப்படி எதற்காக அவர் சிபாரிசு கடிதம் எழுதினார் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். சன்னி தியோல் மஹிந்திரா நிறுவனத்தின் கார் விற்பனையாளர் ஒருவருக்கே தனது சிபாரிசு கடிதத்தை எழுதியிருக்கின்றார்.
பொதுவாக, அரசியல்வாதிகள் தங்களின் சிபாரிசு கடிதத்தை பணியமர்வுக்காக அல்லது படிப்பிற்காக அல்லது அரசு துறைகளில் தங்களைச் சேர்ந்தவர்களுக்கு உடனடியாக வேலை முடிவதற்காக, இதுபோன்ற சில காரணங்களுக்காகவே தங்களின் சிபாரிசு கடிதத்தை வழங்குவர்.
இந்த நிலையில், சற்று மாறுதலாக சன்னி தியோல் உடனடியாக காரை வழங்கக் கோரி தனது சிபாரிசு கடிதத்தை எழுதியிருக்கின்றார். இதுகுறித்த கடிதமே தற்போது இணையத்தில் அதிக வேகத்தில் வைரலாகி வருகின்றது. மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான கார்களில் மாடல்களில் ஒன்று தார் எஸ்யூவி.
இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. இதனால், நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் காத்திருப்பு காலம் சற்று மிக அதிகமாக தென்படுகின்றது. விற்பனையாளர், மாநிலம், நகரம் ஆகியவற்றைப் பொருத்து ஒரு வருடங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதிரியான அதிக டிமாண்ட் உள்ள தார் எஸ்யூவி காரையே தனக்கு வேண்டப்பட்டவருக்கு உடனடியாக வழங்குமாறு சிபாரிசு கடிதத்தை எழுதியிருக்கின்றார் எம்பி சன்னி தியோல். இந்த கடிதம் பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் பகுதியில் செயல்பட்டு வரும் ஓர் மஹிந்திரா ஷோரூமுக்கு எழுதப்பட்டதாகும்.
இந்த சிபாரிசு கடிதத்தை யாருக்காக சன்னி தியோல் எழுதினார் என்பதுதான் கூடுதல் சுவாரஷ்யமானது. இக்கடிதத்தை சுஜன்பூர் எம்எல்ஏ தினேஷ் சிங் தாக்கூரின் மகள் சுர்பி தாக்கூருக்காக அவர் எழுதியிருக்கின்றார். இதுகுறித்து அவர் கடிதத்தில் எழுதியதாவது, "சுஜன்பூர் எம்எல்ஏவின் மகள் சுர்பி தாக்கூருக்கு முன்னுரிமையின் அடிப்படையில் உடனடியாக தார் எஸ்யூவி காரை வழங்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
மேலும், "புதிய தார் எஸ்யூவி காருக்காக சுர்பி ஏற்கனவே முன்தொகையாக ரூ. 21 லட்சத்தைச் செலுத்திவிட்டதாகவும், உடனடியாக அவருக்கு காரை டெலிவரி கொடுங்கள்" என கூறப்பட்டிருக்கின்றது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, சுஜான்பூர் எம்எல்ஏ தினேஷ் சிங் தாக்கூரின் மகள் சுர்பிக்கு இன்னும் சில நாட்களில் திருமணமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
இதற்காகவே புதிதாக கார் வாங்கும் திட்டம் போடப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையிலேயே நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கும் விதமாக இந்த சிபாரிசு கடிதத்தை சன்னி தியோல் எழுதியிருக்கின்றார். ஆனால், இதற்கு நிர்வாகத்திடம் என்ன பதில் கூறப்பட்டது என்பது பற்றிய தகவல் வெளிவரவில்லை.
இருப்பினும், பாஜக எம்பியின் சிபாரிசு கடிதம் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்திரா தார் எஸ்யூவி இந்தியாவில் ஆறு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நபோலி கருப்பு, ரேஜ் சிவப்பு, அக்குவாமெரைன், கேலக்ஸி கிரே, ராக்கி பீஜ் மற்றும் மிஸ்டிக் காப்பர் ஆகிய நிறங்களில் தார் எஸ்யூவி கிடைக்கிறது.
இதுமட்டுமின்றி இருவிதமான ரூஃப் தேர்வுகளும் இக்காரில் வழங்கப்படுகின்றது. மேலும், முன்பிருந்த பழைய தலைமுறை தார் காரைக் காட்டிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் புதிய தலைமுறை தார் எஸ்யூவியில் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், முன்பு ஆஃப்-ரோடு வாகனமாக மட்டும் காணப்பட்ட தார் தற்போது குடும்பங்களுக்கான வாகனமாகவும் மாறியிருக்கின்றது. இந்த எஸ்யூவியை 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ-டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் மஹிந்திரா வழங்குகின்றது.
இதில், பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 130 பிஎஸ் பவரையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. தொடர்ந்து, கூடுதல் சிறப்பு வசதிகளாக எலெக்ட்ரானிக்கல்லி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்கள், 7 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டது), சாவியில்லா நுழைவு என பல்வேறு சிறப்பு தொழில்நுட்பங்களுடன் இக்கார் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!