விலை உயர்ந்த சொகுசு காரில் வந்த நடிகர்... காரை நிறுத்தி காவலர்கள் செய்த காரியம்! இத எதிர்பார்க்கவே இல்ல!
பிரபல நடிகர் வந்த சொகுசு காரை நிறுத்திய காவலர்கள் நாம் எதிர்பார்த்திராத ஓர் காரியத்தைச் செய்திருக்கின்றனர். அவர்கள் என்ன செய்தார்கள் என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், சின்னத்திரையில் அதிகம் வலம் வருபவர் என பல்வேறு ரோல்களை மேற்கொண்டு வருபவர் சுனில் ஷெட்டி. இவரின் விலையுயர்ந்த சொகுசு காரையே போலீஸார் இருவர் மிக சமீபத்தில் மும்பையின் முக்கிய சாலை ஒன்றில் வைத்து மடக்கி இருக்கின்றனர்.

நடிகரின் கார் எதற்காக மடக்கப்பட்டது என்பது பற்றிய துள்ளியமான தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும், இறுதியில் காவலர்கள் இருவரும் நடிகர் சுனில் ஷெட்டி உடன் இணைந்து செல்ஃபி எடுத்திருக்கின்றனர். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பணியில் இருக்கும் இரு காவலர்கள் நடிகரின் காரை நிறுத்தி செல்ஃபி எடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. சுனில் ஷெட்டி ஓட்டி வந்தது விலையுயர்ந்த பென்ஸ் ஜி வேகன் (Mercedes-Benz G-Wagen) சொகுசு காராகும். இந்த காரை இந்தியாவில் ஒரு சில குறிப்பிட்ட நபர்களே பயன்படுத்தி வருகின்றனர்.

முக்கிய திரை பிரபலங்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்களிடத்தில் மட்டுமே இக்கார் பயன்பாட்டில் இருக்கின்றது. சொகுசு மற்றும் பிரீமியம் தரம் அதிகம் என்பதால் இக்காருக்கு செல்வந்தர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவியது. அதே நேரத்தில் இதன் விலையும் மிக மிக அதிகம் ஆகும். இதன் ஆரம்ப நிலை தேர்வின் விலை ரூ. 1.64 கோடி ஆகும். இதன் உச்சபட்ச தேர்வின் விலை ரூ. 2.45 கோடிகள் ஆகும்.

இத்தகைய விலையுயர்ந்த காரில் வந்தபோதே காவலர்கள் இருவர் நடிகரிடம் செல்ஃபி எடுத்திருக்கின்றனர். காவலர்களின் இந்த செயல்குறித்த வீடியோவை சிஎஸ்12 விளாக்ஸ் எனும் யூட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது. சுனில் ஷெட்டி இடம் இந்த ஓர் விலையுயர்ந்த கார் மட்டும்தான் இருக்கிறது என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

அவரிடத்தில் பல்வேறு விலையுயர்ந்த கார்கள் இருக்கின்றன. அதில் பல மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-கிளாஸ் ஜி350டி காரைப் போல பல கோடி ரூபாய் மதிப்புக் கொண்டவையாக இருக்கின்றன. ஹம்மர் எச்2, ஜீப் விராங்க்ளர், லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் மற்றும் இன்னும் ஓர் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ஜிஎல்எஸ் ஆகிய சொகுசு கார்களையே நடிகர் பயன்படுத்தி வருகின்றார்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஜி வேகன் சொகுசு காரை 2019ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இக்காரில் சொகுசு மற்றும் பிரீமியம் வசதிகள் ஏராளமாக இருக்கின்றன. 12.3 இன்ச் திரை (இது இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாக செயல்படும்), லெதர் இருக்கைகள், பன்முக வசதிகள் கொண்ட ஸ்டியரிங் வீல், புஷ் ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன், எல்இடி ஹெட்லேம்ப், மூன்று விதமான க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆம்பிசியன்ட் மின் விளக்கு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் ஜி வேகன் சொகுசு காரில் இடம் பெற்றிருக்கின்றன.

சொகுசு வசதி மட்டுமல்ல இட வசதி மற்றும் உருவத்திலும் பிரமாண்டமானதாக ஜி வேகன் காட்சியளிக்கின்றது. இக்காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 241 மி.மீட்டராக., இருக்கின்றது. இதன் வாட்டர் வேடிங் திறன் 700 மிமீ., அப்ரோச் ஆங்கிள் 30.9 டிகிரி., பிரேக்ஓவர் ஆங்கிள் 29.9 டிகிரி மற்றும் டிபார்ச்சர் ஆங்கிள் 25.7 டிகிரி ஆக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால், இக்காரை மிக சிறந்த ஆஃப் ரோடு வாகனமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க இதுபோன்ற பிரம்மிக்க வைக்கும் வசதிகளை முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்தியாவில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, சாரா அலிகான், ஜிம்மி ஷெர்கில், ரன்பீர் கபூர் மற்றும் பிரபல தொழிலதிபர் அம்பானி ஆகியோர் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் சொகுசு காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இன்னும் பலரிடத்திலும் இக்கார் பயன்பாட்டில் இருப்பது கவனிக்கதகுந்தது.


Click it and Unblock the Notifications








