சாலையில் சும்மா சென்று கொண்டிருந்த ஸ்கார்பியோவை தூக்கிய காவல்துறை... போலீஸாரின் அதிரடிக்கு என்ன காரணம்?
சாலையில் சென்றுக் கொண்டிருந்த ராணுவ தோற்றம் கொண்ட ஸ்கார்பியோ காரை போலீஸார் பறிமுதல் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்களின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக மஹிந்திரா ஸ்கார்பியோ இருக்கின்றது. குறிப்பாக, அட்வென்சர் பயண பிரியர்களின் மனம் கவர்ந்த வாகனமாக ஸ்கார்பியோ இருக்கிறது. இத்தகைய வாகனத்தையே மும்பை நகர போலீஸார் தற்போது பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன காரணத்திற்காக போலீஸார் இந்த கார்களை பறிமுதல் செய்துள்ளனர் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். பார்ப்பதற்கு ராணுவத்தினரின் கார் போன்றிருக்கின்றது, இதை ஏன்? காவலர்கள் பறிமுதல் செய்தனர் என்ற உங்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கும்.

இந்த காரணத்திற்காகதான் காவலர்கள் மஹிந்திரா ஸ்கார்பியோ கையகப்படுத்தியிருக்கின்றனர். அதாவது, மஹிந்திரா ஸ்கார்பியோ ஓர் ராணுவ வாகனம் போன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த காரணத்திற்காகவே அக்கார் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆம், இது ஓர் ராணுவ தோற்றம் கொண்ட தனி நபர் வாகனம் ஆகும்.

எனவேதான் இந்த காரை போலீஸார் தூக்கியிருக்கின்றனர். இம்மாதிரியான தோற்றத்தை ராணுவ வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதியாகும். ஆகையால், ராணுவத்தை தவிர வேறு எந்த அமைப்புகளோ அல்லது தனி நபரோ நிறம் மற்றும் தோற்றத்தைப் பயன்படுத்தக் கூடாது.

இந்த விதியை மீறியே மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கு ராணுவ வாகனம் போன்ற நிறக்கலவை கொடுக்கப்பட்டுள்ளது. ராணுவ தோற்றம் கொண்ட வாகனத்தை இளைஞர்கள் சிலர் ஓட்டி வந்திருக்கின்றனர். அதில் ஒருவர் கூட ராணுவ சீருடையை அணியவில்லை. இதனால், சந்தேகம் எழுந்ததன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

அப்போது அது ஓர் ராணுவ தோற்றம் கொண்ட தனி நபர் வாகனம் என்பது தெரியவந்தது தெரிய வந்தது. இதையடுத்தே உரிய அனுமதியின்றி ராணுவ நிறம் பயன்படுத்தியதற்காக ஸ்கார்பியோ பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் ராணுவ வாகனங்களுக்கு ஆலிவ் பச்சை நிறம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிறம் பிரத்யேகமாக நாட்டின் பாதுகாப்பு படைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால், நாம் மேலே கூறியதைப் போல் பொதுமக்கள் மற்றும் பிற அமைப்பினர் இந்த நிறத்தை பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதி அனைவருக்கும் பொருந்தும்.

பிரத்யேக ராணுவ நிறங்களுடன் சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்கள்.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது குறிப்பிட்ட சில இருசக்கர வாகனங்களை பேட்டில் பச்சை நிறத்தில் சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. இந்தியாவில் இருந்து தயார் செய்யப்பட்டே அதன் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், அவை இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காது.

அதேசமயம், இந்தியாவில் மஹிந்திரா, ஜாவா மற்றும் ஜீப் ஆகிய நிறுவனங்கள் ராணுவத்தின் ஆலிவ் பச்சை நிறத்திலான வாகனங்களை அரசின் அனுமதியுடன் விற்பனைக்கு வழங்கி வருகின்றன. ஆனால், அவை ராணுவத்தின் வாகனத்தைக் காட்டிலும் லேசான மாறுபட்ட தோற்றத்துடன் விற்பனைக்குக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால், உரிய அனுமதி இருந்தால் மட்டுமே ராணுவ வாகன தோற்றத்திலான கார் அல்லது பைக்கை நம்மால் பயன்படுத்த முடியும். உரிய அனுமதி அல்லது ஆவணம் இல்லை எனில் தற்போது மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் சொந்தக்காரர்களுக்கு நேர்ந்த நிலைமையே ஏற்படும். இந்தியாவில் வாகன மாடிஃபிகேஷனுக்கு கடும் அபராதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், பெரும் அபராதம் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








