Just In
- 1 hr ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 1 hr ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 1 hr ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 2 hrs ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- Sports தோனியால் 2 - 3 ஓவர்கள் தான் விளையாட முடியும்.. ஏன் தெரியுமா? காரணத்தை சொன்ன பயிற்சியாளர் பிளெமிங்!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- News நள்ளிரவில் என்ன குழப்பம்? மாறி மாறி வந்த கணக்கு.. இதெல்லாம் காரணமா? ஓட்டுப்பதிவு 72% அல்லது 69.4%?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பெட்ரோல், டீசல் என எதுவும் தேவையில்லை.. விவசாயி உருவாக்கிய சோலார் வாகனம்... அவார்டே கொடுக்கலாம்போல!
பெட்ரோல் மற்றும் டீசல் என எதுவும் தேவைப்படாத ஓர் சோலார் வாகனத்தை விவசாயி ஒருவர் உருவாக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலைக் கீழே காணலாம்.
கொரோனா வைரசும், இதனால் நடைமுறைக்கு வந்த ஊரடங்கு விதியும் பலரின் வாழ்க்கையை தலை கீழாக புரட்டிப் போட்டிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் எந்திரிக்கவே முடியாத வகையில் அதளபாதாளத்தில் ஒரு சிலரை இந்த கொடூர வைரஸ் வீழ்த்தியிருக்கின்றது.
அதேசமயம், குறிப்பிட்ட சிலருக்கு இந்த வைரஸ் புதுவிதான அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. குடும்பங்களுடன் பெரியளவில் நேரம் செலவிடாதவர்களைக்கூட 24X7 குடும்பத்தினருடன் மட்டுமே இருக்கின்ற வகையில் மாற்றியமைத்தது. தொடர்ந்து, சிலரை புதுமையான தொழில் மற்றும் பணிகளில் ஈடுபடவும் நகர்த்தியிருக்கின்றது.
அந்தவகையில், கோவிட்-19 வைரசால் நீண்ட காலமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த விவசாயி ஒருவர் பெட்ரோல் மற்றும் டீசல் தேவைப்படாத ஓர் வாகனத்தை உருவாக்கியிருக்கின்றார். அதாவது, சூரிய ஒளியால் இயங்கக் கூடிய சோலார் பேனல் வசதிக் கொண்ட வாகனத்தையே விவசாயி உருவாக்கியிருக்கின்றார்.
இதனை சோலார் பேனல் மற்றும் சார்ஜிங் பாயிண்ட் வாயிலாகவும் இந்த வாகனத்தை சார்ஜ் செய்ய முடியும் என்பது விவசாயி கண்டுபிடித்த வாகனத்தின் தனி சிறப்பாகும். வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நேரத்தில் யுட்யூப் மற்றும் புத்தகங்கள் வாயிலாக அறிந்த கொண்ட தகவல்களின் அடிப்படையில் இந்த வாகனத்தை உருவாக்கியிருப்பதாக விவசாயி கூறியிருக்கின்றார்.
ஒடிசா மாநிலம் கரஞ்சியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஷில் அகர்வால். இவரே சோலார் பேனல் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கியவர் ஆவார். இந்த வாகனத்தில் 850 வாட் மோட்டார் மற்றும் 100 Ah/ 54 V திறன் வசதிக் கொண்ட பேட்டரியையும் அவர் பயன்படுத்தியிருக்கின்றார்.
இப்பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 300 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் விவசாயி கூறியிருக்கின்றார். மேலும், ஏஎன்ஐ தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "தனக்கு சொந்தமாக ஓர் ஒர்க்ஷாப் இருக்கின்றது. இதில் வைத்தே சோலார் வாகனத்தை உருவாக்கினேன். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 8.30 மணி நேரங்கள் ஆகும்" என கூறினார்.
தான் பயன்படுத்தியிருப்பது மிக பொருமையாக சார்ஜாகும் பேட்டரி என்றும், அது 10 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும் என்றும் அவர் கூறியிருக்கின்றார். விவசாயி உருவாக்கியிருப்பது நான்கு சக்கர வாகனமாகும். இந்த வாகனத்திற்கு தேவையான சட்டங்கள் மற்றும் பிற கூறுகளை அவரே வடிவமைத்து பயன்படுத்தியிருக்கின்றார் என்பது கூடுதல் சிறப்பு தகவல்.
இதுதவிர, மோட்டார் ஒயின்டிங், எலெக்ட்ரிக்கல் ஃபிட்டிங் மற்றும் பிற முக்கிய பணிகள் அனைத்தையுமே தானாகவே செய்திருக்கின்றார் அந்த விவசாயி. இந்த வாகனத்தை உருவாக்கியதால் தான் ஓர் சிறந்த விவசாயி மட்டுமல்ல சிறந்த கண்டுபிடிப்பாளர் என்பதையும் அவர் நிரூபித்திருக்கின்றார்.
விவசாயியின் இந்த கண்டுபிடிப்பைக் கண்டு ஆர்டிஏ அலுவலரே வியந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுச் சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத இந்த மாதிரியான வாகனங்களே பயன்பாட்டிற்கு தேவை என்றும் ஆர்டிஓ அலுவலர் மயூர்பஞ்ச் கோபால் கிருஷ்ணா கூறியிருக்கின்றார். ஆனால், இந்த வாகனத்திற்கு ஆர்டிஓ சான்று வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி