இன்னும் ஒரு சில வாரத்தில் அறிமுகமாகிறது ஓலாவின் முதல் மின்சார ஸ்கூட்டர்! காத்திருப்புக்கு முற்று புள்ளி வைங்க!
ஓலா நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் ஒரு சில வாரங்களில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா சொந்தமாக்கியிருக்கும் மின்சார வாகன நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்நிறுவனத்தின் பிரமாண்டமான உற்பத்தி ஆலை தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

இங்கிருந்தே (தமிழம்) உலக நாடுகள் பலவற்றிற்கு தனது மின் வாகனங்களை ஏற்றுமதி செய்ய ஓலா திட்டமிட்டிருக்கின்றது. முன்னதாக, தற்போது தயாரிக்கப்பட்டு வரும் மின் வாகனங்களை முதலில் அரசின் கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட்டுக்கு விற்பனைச் செய்ய நிறுவனம் ஆர்வம் தெரிவித்திருக்கின்றது.

இந்த நிலையில்தான் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் இன்னும் ஒரு சில வாரங்களில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், துள்ளியமான தேதிகுறித்த தகவல் வெளயாகவில்லை. இருப்பினும், இந்த தகவல் ஓலா மின்சார ஸ்கூட்டரை பெரிதும் எதிர்பார்த்து வந்த இந்திய இளைஞர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஓலாவின் முதல் மின்சார ஸ்கூட்டர் ஒரு முழுமையான சார்ஜில் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாதிரியான சூப்பர் திறன்கள் கொண்ட மின் வாகனங்களை உற்பத்தி செய்யவமே தமிழகத்தில் பிரமாண்டமாக தனது உற்பத்தி ஆலையை ஓலா உருவாக்கி வருகின்றது. 'மெகா' ஃபேக்டரி என அழைக்கப்படும் இந்த ஆலை ரூ. 2,400 கோடி முதலீட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் உருவாகி வருகின்றது.

இது ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் மின்சார ஸ்கூட்டர்களை தயாரிக்கும் திறன் கொண்டது என ஓல தெரிவித்துள்ளது. இந்த ஆலை 2022ம் ஆண்டின் மத்திக்குள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு விடும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிக சமீபத்தில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியத்தை ஒன்றிய அரசு கணிசமாக உயர்த்தி அறிவித்தது. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் விலை பல மடங்கு குறைந்த வண்ணம் இருக்கின்றது.

ரூ. 15 ஆயிரம் வரை மின்சார இருசக்கர வாகனங்களின் விலை குறைந்திருக்கின்றது. மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஒன்றிய அரசு ஃபேம்-2 திட்டத்தில் மாற்றம் செய்து, மானியம் அதிகரிப்புகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்த நிலை அனைத்து மின் வாகனங்களின் விற்பனையையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. மிக விரைவில் அறிமுகமாக இருக்கும் ஓலா மின்சார ஸ்கூட்டரின் விற்பனைக்கும் இத்திட்டம் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








