Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்டா முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கனவுலகூட வாங்க முடியாது போலிருக்கே... மிக மிக அதிக விலையில் விற்பனைக்கு வந்த மின்சார கார்! இவ்ளோ அதிகமா?
பிரபல சொகுசு உற்பத்தி நிறுவனம் மிக மிக அதிக விலையில் ஓர் எலெக்ட்ரிக் காரை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான போர்ஷே (Porsche), அதன் முழு மின்சாரத்தால் இயங்கும் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. போர்ஷே டேகான் (Taycan EV) எலெக்ட்ரிக் காரே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இக்காருக்கு இந்திய மதிப்பில் ரூ. 1.5 கோடி என்ற உச்சபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகபட்ச விலையால் நாட்டின் மிகவும் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் காராக போர்ஷே டேகான் மாறியிருக்கின்றது. இந்த காருக்கான புக்கிங் பணிகள் தற்போது நாட்டில் தொடங்கியுள்ளன.
இப்போது இதனை புக் செய்தால் 2022ம் ஆண்டிலேயே பெற்றுக் கொள்ள முடியும். ஆம், போர்ஷே டேகான் எலெக்ட்ரிக் காரை பெற வேண்டுமானால் அடுத்த ஆண்டு முதல் காலாண்டு வரை காத்திருக்க வேண்டுமாம். போர்ஷே டேகான் இவி மின்சார கார் உற்பத்திக்காக நிறுவனம் 50 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
போர்ஷே நிறுவனம் இந்தியாவில் மின்சாரத்தால் டேகான் இவி எலெக்ட்ரிக் காரை மட்டுமே இன்று விற்பனைக்குக் களமிறக்கவில்லை. நிறுவனம், மற்றுமொரு, புதுப்பிக்கப்பட்ட மசான் ஆடம்பர எஸ்யூவி காரையும் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சொகுசு வாகனம் வரும் 2022 ஜனவரியில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும்.
புதிய டேகான் இவி மின்சார காரில் அதிகபட்ச ரேஞ்ஜை வழங்குவதற்காக 560 kwh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இதன் மின் மோட்டாரில் விஐடி (ViT) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மின்சார கார் நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். டேகான், டேகான் 4எஸ், டர்போ மற்றும் டர்போ எஸ் ஆகிய தேர்வுகளிலேயே டேகான் மின்சார கார் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், டர்போ எஸ் தேர்வானது மிக அதிக திறன் கொண்டதாக காட்சியளிக்கின்றது.
டர்போ எஸ் தேர்வில் 560 கிலோவாட் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 761 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இந்த வெர்ஷன் வெறும் 2.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது.
இத்தகைய திறன் வெளிப்பாட்டால் நாட்டின் மிக அதிக திறன் கொண்ட எலெக்ட்ரிக் காராக போர்ஷே டேகான் இவி காட்சியளிக்கின்றது. இந்த கார்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது நிறுவனம் பனமேரா கார் மாடலின் பிளாட்டினம் எடிசனை (Porsche Panamera Platinum Edition) வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் சிறப்பு பதிப்பு வெர்ஷன் ஆகும்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!