Just In
- 24 min ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 2 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 7 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 7 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
Don't Miss!
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டாடாவிலிருந்து விலகிய பிரதாப் போஸ் மஹிந்திரா டிசைன் பிரிவு தலைவரானார்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வடிவமைப்புப் பிரிவு தலைவர் பதவியில் இருந்து விலகிய பிரதாப் போஸ் மஹிந்திரா நிறுவனத்தில் இணைந்துள்ளார். அவர் மஹிந்திரா நிறுவனத்தின் டிசைன் பிரிவின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.
டாடா கார்கள் என்றாலே வாடிக்கையாளர்கள் காத தூரம் ஓடிய நிலையில், அந்நிறுவனத்தின் பல புதிய கார் மாடல்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரத் துவங்கியது. கடந்த சில ஆண்டுகளாக அறிமுகம் செய்யப்பட்ட நெக்ஸான், ஹாரியர், சஃபாரி உள்ளிட்ட பல புதிய கார் மாடல்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்த நிலையில், புதிய டாடா கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றதற்கு, டிசைன் சிறப்பாக அமைந்து வருவதும் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
புதிய டாடா கார்களின் வடிவமைப்புக்கு தனி மகத்துவம் கிடைத்துள்ளதற்கு காரணியாக, அந்நிறுவனத்தின் டிசைன்ப பிரிவு தலைவராக இருந்த பிரதாப் போஸ் மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார்.
இந்த நிலையில், அவர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசைன் பிரிவு தலைவர் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகினார். இது இந்திய ஆட்டோமொபைல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் எங்கு பணியில் சேரப் போகிறார் என்பதும் புதிராக இருந்தது.
இந்த நிலையில், எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில், நாட்டின் மற்றொரு மிகப்பெரிய உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவில் இணைந்துள்ளார். அதாவது, மஹிந்திரா நிறுவனத்தின் டிசைன் பிரிவின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் மஹிந்திரா நிறுவனத்தின் வாகன வடிவமைப்பு மையங்கள் இனி இவரது கட்டுப்பாட்டில் செயல்படும். மேலும், இங்கிலாந்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய டிசைன் மையமும் இவரது கட்டுப்பாட்டில்தான் செயல்பட உள்ளது.
வரும் ஜூன் 24ந் தேதி மஹிந்திரா நிறுவனத்தின் வாகன வடிவமைப்புப் பிரிவின் தலைவராக பிரதாப் போஸ் பதவி ஏற்க உள்ளார். மஹிந்திரா நிறுவனத்தின் வாகன மற்றும் விவசாய வாகன பிரிவு நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெஜுரிகருக்கு கீழ் பிரதாப் போஸ் பணியாற்ற உள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக வாகன வடிவமைப்புத் துறையில் பாண்டித்தியம் பெற்றவர் பிரதாப் போஸ். இதில், 14 ஆண்டுகள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். பியாஜியோ மற்றும் டெய்ம்லர் க்றைஸ்ல் நிறுவனங்களிலும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.