ஃபேன்ஸி நம்பர் கலாச்சாரம் முடிவிற்கு வருகிறதா? முனைப்பில் பஞ்சாப் அரசு... விழுந்தது புதிய தடை!!
ஆடம்பர எண் (ஃபேன்ஸி நம்பர்) கலாச்சாரத்தை நிறுத்தி கொள்ளும் பஞ்சாப் அரசாங்கத்தின் முயற்சிக்கு தடைக்கு உருவாகியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

விண்டேஜ் எண்கள் என்றும் அழைக்கப்படும் பழைய ஆடம்பர பதிவு எண்களை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரையில் சுமார் 100 உரிமையாளர்கள் புதிய எண்களுக்காக மாநில போக்குவரத்து துறையை அணுகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஆடம்பரமான எண்களை கொண்ட வாகனங்கள் மாநிலத்தில் ஆயிரக்கணக்கில் உள்ளதாக பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவற்றில் பெரும்பான்மையானவை அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களிடம் தான் உள்ளது.

விண்டேஜ் எண்களின் விற்பனையின் போதும், அவை புதுப்பித்தலின் போதும் பெரிய அளவில் பணம் கை மாறுதல் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.

கடந்த டிசம்பரில் பஞ்சாப் மாநில முதல் அமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் பழமையான வாகன எண்களை மீண்டும் பதிவு செய்வதை நிறுத்திகொள்ளும் ஆணையை வெளியிட்டார். மோட்டார் வாகன சட்டம் இயற்றப்பட்ட 1988ஆம் ஆண்டிற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட வாகன எண்களும் அடங்குகின்றன.

விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டும் வகையிலும்ம், சட்டத்திற்கு புறமான செயல்களை தவிர்க்கும் நோக்கிலும் பஞ்சாப் முதல்வர் இந்த சட்டத்தை கொண்டுவந்தார். பஞ்சாப் மட்டுமின்றி வேறு சில மாநிலங்களிலும் இவ்வாறான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் ஹரியானா & ஹிமாச்சல் பிரதேசம் மாநிலங்களில் மோட்டார் வாகன சட்டம் பிரிவு 217-இன் படி இவ்வாறான உத்தரவுகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் விண்டேஜ் வாகன பதிவு எண்களை கொண்டிருப்பவர்கள், அதனை தொடரவே விரும்புகின்றனர்.

விண்டேஜ் வாகன எண்கள் சிலரது அடையாளங்களாகவும் விளங்குகின்றன. விஜபிகள் சாலைகளில் அவர்களது வாகன எண்ணை வைத்து அடையாளப்படுத்தப்படுகின்றனர். அவர்களினால் அவர்களது வாகனங்களும் சாலையில் தனியாக தெரிகின்றன.

ஏற்கனவே கூறியதுபோல், தொடர விரும்புபவர்களில் பெரும்பான்மையானவர்கள் வசதியானவர்கள் என்பதால் உத்தரவுகளை தொடர்வதில் அரசாங்கங்களுக்கு சவால்கள் ஏற்படுகின்றன.

இருப்பினும் ஃபேன்ஸி நம்பர் பயன்பாட்டை தவிர்க்க பஞ்சாப் அரசாங்கம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் இது பஞ்சாப் போன்ற நாட்டு எல்லையில் அமைந்துள்ள மாநிலங்களுக்கு சிக்கல்களை உருவாக்கக்கூடியது.

சமூக விரோதிகள், விஜபிகளின் வாகன எண்ணில் வாகனங்களை பயன்படுத்துவதாக அவ்வப்போது பஞ்சாப்பில் செய்திகள் வெளிவருகின்றன. ஃபேன்ஸி நம்பரை கொண்ட கார்கள் போலீஸார் அழைப்பிற்கு நிற்பதில்லை எனவும் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.


Click it and Unblock the Notifications








