"ஆம்புலன்ஸ் இல்லையா, இந்தாங்க என்னோட கார வச்சுக்கோங்க"... விலையுயர்ந்த காரை வாரி வழங்கிய காங்கிரஸ் தலைவர்!!
தனது தொகுதியில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் தான் பயன்படுத்தி வந்த விலையுயர்ந்த காரையே காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவர் வழங்கியிருக்கின்றார். இச்சம்பவம்குறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஆம்புலன்ஸ் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை நாடு முழுவதும் எந்த பக்கம் திரும்பினாலும் பற்றாக்குறைகள் பற்றிய தகவலே ஒலித்துக் கொண்டிருக்கின்றது. உயிர் கொல்லி கொரோனா வைரஸ் இந்தியாவில் ஏற்படுத்தும் இன்னல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

குறிப்பாக, தொற்றால் இறப்போரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருவது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. வைரஸ் தொற்றின் எண்ணிக்கைக் குறைந்து காணப்பட்டாலும் இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு தலைவிரித்தாடி வருகின்றது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு தனது விலையுயர்ந்த காரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆம்புலன்ஸாக பயன்படுத்திக் கொள்வதற்காக வழங்கியிருக்கின்றார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் நகரத்தைச் சேர்ந்தவர் லக்ஸ்மனம் சிங். சந்துதா சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ ஆவார். இவரே தனது தொகுதியில் உள்ள பின்ஜங்கி மருத்துவமனைக்கு விலையுயர்ந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை பரிசாக வழங்கியிருக்கின்றார்.

கொரோனா வைரஸ் அதிக தீவிரமாக பரவி வருவதால் மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. நாளுக்கு நாள் மக்கள் அதிகம் நோய் தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தற்போது மாநிலம் முழுவதும் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது.

ஆகையால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவும் விதமாக தான் பயன்படுத்தி வந்த ஃபார்ச்சூனர் காரை ஆம்புலன்ஸாக பயன்படுத்திக் கொள்ளும்படி எம்எல்ஏ லக்ஷமனன் வழங்கியிருக்கின்றார். எம்எல்ஏ-வின் இச்செயல் மக்கள் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸாக மாறியிருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் 24 மணி நேர சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்கு உதவும் விதமாக இது சேவையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் ரூ. 30 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

பிரமாண்ட உருவம், பாரிய இட வசதி மற்றும் அதிக சொகுசு வசதி என எக்கசக்க அம்சங்களுடன் இக்கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட காரை எம்எல்ஏ அவரது தொகுது மக்களுக்காக வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

மிக சமீபத்தில் சென்னையில் கால் டாக்சி வாகனங்கள் ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவின்பேரில் 250 கார்கள் தற்காலிக ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








