மின்சார கார் தயாரிப்பில் களமிறங்கும் ஒப்போ?.. சியோமி, ஹூவாய் நிறுவனங்களை தொடர்ந்து அதிரடி!!
சியோமி, ஹூவாய் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களைத் தொடர்ந்து ஒப்போ நிறுவனமும் மின் வாகன தயாரிப்பில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ, மிக விரைவில் மின்சார கார் உற்பத்தியில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை கார் நியூஸ் சைனா எனும் சீனாவைச் சேர்ந்த செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

சியோமி, ஹுவாய் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக மின் வாகன தயாரிப்பில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக சமீபத்திலேயே மேற்கூறிய செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியிட்டிருந்தன.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஒப்போ மின்வாகன சந்தையில் நுழைவது குறித்த தகவலை ஒப்போ வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை ஒப்போ செல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ-ஆன டோனி சென் உறுதிப்படுத்தியுள்ளார்.

மிக தீவிரமாக மின்சார கார் தயாரிப்பில் ஒப்போ நிறுவனம் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலைக்கு ஆட்கள் சேர்ப்பது வரையிலான பணிகளில் நிறுவனம் இறங்கிவிட்டதாக நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.

ஆகையால், மிக விரைவில் ஒப்போவின் மின் வாகன தயாரிப்புகுறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில், டெஸ்லா மின்சார கார்களுக்கான பேட்டரியை தயாரித்து வரும் சிஓடிஎல் நிறுவனத்திடம் ஒப்போ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சென் சமீபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

இதுபோன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே ஒப்போ செல்போன் தயாரிப்பு நிறுவனம் மின் வாகன உற்பத்தியில் களமிறங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒப்போ அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.

2020ம் ஆண்டில் உலகளவில் 112 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனைச் செய்திருக்கின்றது. இது ஒட்டுமொத்த சந்தையில் 8 சதவீத விற்பனை பங்கு என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மின் வாகன சந்தையிலும் ஓர் கை விரைவில் களமிறங்க நிறுவனம் தயாராகி வருகின்றது.


Click it and Unblock the Notifications








