Just In
- 1 hr ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 1 hr ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 2 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 4 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- News மாலையில் திடீரென வாக்குச்சாவடியில் குவிந்த 1000 பேர்.. மரக்காணம் அருகே பரபரப்பு.. என்ன நடந்தது!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
என்னங்க இப்படி சொல்லிட்டாங்க... அது இல்லைனா இன்சூரன்ஸை க்ளைம் பண்ண முடியாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!
தகுதியான பதிவு சான்று இல்லை என்றால் காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீட்டை கோர முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவலைக் கீழே காணலாம், வாங்க.
காப்பீட்டு தொகையை உரிமை கோரியதில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக ஓர் வழக்கு உச்ச நீதிமன்றத்தின் கவனிப்பிற்கு அண்மையில் வந்தது. பிரீமியம் தாரரின் ரூ. 6.17 லட்சம் காப்பீட்டு தொகைக்கான க்ளைமிங்கை காப்பீட்டு நிறுவனம் ஏற்காததன் காரணத்தினால் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. இதன் விளைவாகவே வழக்கு நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்தது.
குறிப்பிட்ட கார் தகுதியான பதிவெண்ணைக் கொண்டிராத காரணத்தினால் காப்பீட்டு நிர்வாகம் இழப்பீடு உரிமை கோரலை நிராகரித்ததாகக் கூறப்படுகின்றது. இது நியாயமானது என கூறி உச்ச நீதிமன்றம் பிரீமியம் தாரரின் விண்ணப்பத்தை ரத்து செய்தது.
காணாமல் போனதாகக் கூறப்படும், தற்காலிக பதிவெண் கொண்ட மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி காரின் உரிமைக் கோரலையே உச்ச நீதிமன்றம் நிராகரித்திருக்கின்றது. வாகன காப்பீட்டிற்கு பெயர்போன நிறுவனங்களில் ஒன்றாக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனத்திடமே மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி காருக்கான காப்பீடு பிரீமியத்தை அதன் உரிமையாளர் பெற்றிருந்தார். இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே காலாவதியாகிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இதைக்கருத்தில் கொண்டும், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் விதிமீறல்கள் அரங்கேறியிருப்பதைக் கருத்தில் கொண்டும் உச்ச நீதிமன்றம் உரிமை கோரலை தள்ளுபடி செய்தது.
தொடர்ந்து, "காப்பீட்டு ஒப்பந்தத்தில் உள்ள அடிப்படை நிபந்தனைகளின் மீறல் இருக்கக் கூடாது" என்று நீதிபதிகள் யுயு லலித், எஸ் ரவீந்திர பட் மற்றும் பெலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கி அமர்வு கருத்து தெரிவித்தது. பொலிரோ எஸ்யூவி கார் திருடப்பட்டபோது தகுதியான பதிவு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
எனவேதான் தகுதியில்லா பதிவு எண்ணை பயன்படுத்தி இருந்த பொலிரோ எஸ்யூவி காருக்கான இழப்பீடு உரிமை கோரலை நீதிமன்றம் ரத்து செய்திருக்கின்றது. அந்த நேரத்தில் வாகனம் தற்காலிக பதிவெண்ணைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனடிப்படையிலேயே, இந்த விவகாரத்தில் பாலிசியை மறுக்க காப்பீட்டாளர்களுக்கு உரிமை உள்ளது என நீதிமன்றம் கூறியது.
மஹிந்திரா பொலிரோ காரின் உரிமையாளர் ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்காநகரில் வசித்து வருகின்றார். இருப்பினும், இவர் பஞ்சாபில் தனது காருக்கான காப்பீட்டு பாலிசியை அவர் வாங்கியிருக்கின்றார். சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது வாகனம் ஜோத்பூரில் உள்ள ஓர் பார்க்கிங்கில் கலவு செய்யப்பட்டிருக்கின்றது.
இதையடுத்து கார் காணாமல் போனது குறித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் காரின் உரிமையாளர் வழக்கு பதிவு செய்தார். தற்போது வரை அக்காரை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என காவல்துறை பதில் அளித்துள்ளது. முறையான பதிவெண்ணைப் பயன்படுத்தாதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே இழப்பீட்டிற்கான உரிமை கோரலையும் மஹிந்திரா கார் உரிமையாளர் இழந்திருக்கின்றார். இந்த நிகழ்வு, வாகனங்களில் முறையான பதிவெண் இருந்தால் மட்டுமே காப்பீடு உரிமை கோரலை மேற்கொள்ள முடியும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
முறையான காப்பீட்டு பாலிசி என்பது ஒவ்வொரு வாகனத்திற்குமே காட்டாயமானது. இது, களவு மற்றும் எதிர்பாராத அசம்பாவிதங்களில் இழப்புகளை ஈடு செய்ய உதவும். எனவேதான் அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும், நாம் அறியாமல் செய்யும் சில தவறுகளால் மேலே பார்த்த நிகழ்வை சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகின்றது. எனவேதான் பாலிசி போன்றவற்றை எடுக்கும் முன்னர் அனைத்து நிபந்தனைகளையும் ஒரு முறை பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...