ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆயிட்டாராம்! ஜாகுவார் காரில் கெத்து காட்டிய நபர்! அடுத்து நடந்த சம்பவம்தான் வேற லெவல்!
ஜாகுவார் காரில் கெத்து காட்டியவருக்கு போலீஸ் தரமான பாடத்தை கற்பித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

குஜராத் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும், கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. ஆகையால், மது பிரியர்களுக்கு தடையில்லாமல் மது சேவை செய்யப்பட்டு வருகின்றது.

இதனைத் தடுக்கும் விதமாக மாநில அரசும், காவல்துறையும் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை பலர் கள்ள சந்தையில் மது விற்பனைச் செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

அந்தவகையில், அண்மையில் கைது செய்யப்பட்டவர் ஐஸ்வர் வஃபோதியா. இவர் கள்ளச் சந்தையில் மதுபானங்களை விற்பனைச் செய்ததாகக் கூறி குஜராத் காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இதுமட்டுமின்றி இவர் அதிகாரப்பூர்வமற்ற துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஐஸ்வர் அண்மையில் பெயில் கோரியிருந்தார்.

இதனடிப்படையில் குஜராத் மாநில நீதிமன்றம் அவருக்கு பெயில் வழங்கியது. இதனைக் கொண்டாடும் வகையில் ஐஸ்வர் வஃபோதியா, விலையுயர்ந்த ஜாகுவார் காரில் வலம் வந்திருக்கின்றார். அப்போது அவருடன் மேலும் சில கார்களும் கான்வாயாக வலம் வந்திருக்கின்றன.

இந்த காரணத்திற்காகவே போலீஸார் மீண்டும் கைது செய்திருக்கின்றனர். ஆமாங்க, ஜாமீன் பெற்று வெளியில் வந்தவர் தற்போது மீண்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறியே ஐஸ்வர் மற்றும் அவரது கூட்டாளிகள் கான்வாயில் ஈடுபட்டிருக்கின்றனர். சூரத்தில் உள்ள அன்ட்ரோலி கிராமத்தை அவர்கள் வலம் வந்திருக்கின்றனர். கொரோனா பாதுகாப்பு கவசம் ஏதுமின்றி அவர்கள் கார்களில் வலம் வந்திருக்கின்றனர். நோயை பரப்பும் வகையிலும், பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் இந்த கான்வாயில் அவர்களை மேற்கொண்டதாகக் கூறி போலீஸார் மீண்டும் ஐஸ்வரை கைது செய்திருக்கின்றனர்.

இத்துடன் கான்வாயின்போது கார் ஜன்னல் வழியாக தொங்கியபடி பயணத்தவர்கள்மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். பொதுவெளியில் கார்களில் ஸ்டண்ட் செய்வது போக்குவரத்து விதிகளின்படி குற்றமாகும். இத்துடன், கொரோனா விதிகளை மீறியதற்கும் ஐஸ்வர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கும் ஐஸ்வர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. சட்ட விரோத துப்பாக்கியை பயன்படுத்தியது மற்றும் கள்ளச் சந்தையில் மது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஆறு நாள் பெயில் அவருக்கு வழங்கப்பட்டு, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications