Just In
- 1 min ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
Don't Miss!
- Finance இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்.. பில்லியனரின் தில்லாங்கடி வேலை.. காதலியுடன் ரகசிய வாழ்க்கை..!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாஸ்க் அணியாமல் கூலாக வந்த மத போதகர்... அவர் சொன்ன காரணம் இருக்கே! தயவுசெஞ்சு அது என்னனு மட்டும் கேட்காதீங்க!
மாஸ்க் அணியாமல் வந்ததற்கு பலே காரணத்தைக் கூறிய மத போதகரால் அதிகாரிகள் ஷாக்காகியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. ஆகையால், வீட்டை வெளியே வரும் மக்கள் மாஸ்க் போன்ற பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வெளியே வரும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, வாகனங்களில் தனியாக வந்தாலும் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதனைப் பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக கடந்த காலங்களைக் காட்டிலும் வைரஸ் தொற்று பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவின் நிலை மிக மோசமானதாகிவிடம் என உலக நாடுகள் கவலைத் தெரிவித்து வருகின்றன. ஆகையால், அனைத்து மாநில அரசுகளும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளைத் தீவிரப்படுத்த தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, வெளியில் வரும் மக்கள் உரிய காரணத்திற்காகவும், உரிய பாதுகாப்பு வசதிகளுடன் வருகின்றனரா என தீவிர கண்கானிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில் அரசு முக்கிய அதிகாரிகள் தொடங்கி அடிமட்ட பணியாளர்கள் வரை ஒரு சிலர் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை மீறியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.
அவர்கள் பொது சேவையில் ஈடுபடுபவர்கள் என்பது தெரிந்தும் சுகாதாரப் பாணியாளர்கள் அவர்களுக்கு கடுமையான அபராதங்களை வழங்கியிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் முகக் கவசம் அணியாமல் வாகனத்தில் வந்த ஓர் மத போதகர் பாதுகாப்பு அதிகாரியிடத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
மத போதகரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் தாமோவைச் சேர்ந்த அவர், அயோத்தி ராம் ஜென்பூமி நிர்மன் அறக்கட்டளையின் தேசிய துணைத்த தலைவர் சுவாமி ஆத்மானந்த் சரஸ்வதி ஆவார்.
இவரே பொது சாலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரில் முகக் கவசம் அணியாமல் வந்தவர். இவரையே மாஸ்க் அணியும்படி காவலர்கள் சிலர் வற்புறுத்தியிருக்கின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அவர் மிக விநோதமான மற்றும் ஷாக்களிக்கக் கூடிய பதில்களை அவர் கூறியிருக்கின்றார்.
"பிரதமர் மோடி எங்களுடைய நலனை பாதுகாத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதைதான் நான் கடைபிடிக்கின்றேன். மாஸ்க் அணிந்தால் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகின்றது. இதனால் விபரீதம் ஏதும் ஏற்பட்டால் யார் பொறுப்பு. எனவேதான் நான் மாஸ்க் அணியவில்லை" என்று அவர் கூறியிருக்கின்றார்.
இருப்பினும், விதிமுறைகளை எடுத்துக் கூறிய காவல்துறையினர் அவரை மாஸ்க் அணியும்படி பல முறை கூறியிருக்கின்றனர். இருப்பினும், தன்னுடைய எண்ணத்தில் அவர் விடாப்பிடியாக இருந்திருக்கின்றார். இதனையடுத்து, காரை ஓரம்கட்ட சொன்ன அதிகாரிகள் அந்த மத போதகருக்கு அபராத செல்லாணை வழங்கி வழி அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் பாதிப்போரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம், மூன்று லட்சம் என எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இதேபோன்று வைரஸ் பாதிப்பால் இறப்போரின் எண்ணிக்கையும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
Image Courtesy: Cobrapost
இந்த மாதிரியான சூழ்நிலையில் மக்கள் தங்களை தாங்களே பாதுகாப்பானது அவசியமானதாக அமைந்துள்ளது. மாஸ்க் அணிவதை, சிலர் இடையூறாக எண்ணுகின்றனர். ஆனால், தற்போது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது. ஆகையால், வாகனத்தில் தனித்து சென்றாலும் மாஸ்க் அணிந்து பயணிப்பது இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளில் மட்டுமின்றி உயிர் கொல்லி வைரசின் பாதிப்பில் இருந்தும் நம்மை பாதுகாக்க உதவும்.
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சாம்பார், ரசம்னு வித விதமா சமைச்சே தம்பி சூப்பரான காரை வாங்கிட்டாரு!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!