Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாடாவின் புதிய காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு... எவ்ளோ முன்தொகை தெரியுமா? ரொம்ப ரொம்பி கம்மிங்க!!
டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் தேர்விற்கான புக்கிங் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா நிறுவனம் விரைவில் அல்ட்ராஸ் மாடலில் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வேரியண்டை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இக்காரின் அறிமுகம் இம்மாதம் 13ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் டாடா கார் விற்பனையாளர்கள் சிலர் இக்காருக்கான புக்கிங்கைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்காக முன் தொகையாக ரூ. 5 ஆயிரத்தை டீலர்கள் வசூலித்து வருவதாக கூறப்படுகின்றது. ஆனால், டாடா நிறுவனம் இதுகுறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு மற்றும் ஆவலைத் தொடர்ந்து டீலர்களாகவே முன் கூட்டி காருக்கான புக்கிங்கை செய்து வருகின்றனர்.

அதேசமயம், புதிய அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் தேர்வின் விலையும் இன்னும் அறிவிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. இதுகுறித்த தகவல் 13 அன்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கார் விற்பனைக்கு வந்த பின்னர் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் ஐ10 டர்போ, மாருதி பலினோ, ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக அமையும்.

அல்ட்ராஸ் டர்போ தேர்வில் 1.2 லிட்டர் டர்போசார்ஜட் எஞ்ஜினே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்ஜினை டாடா நிறுவனம் அதன் மற்றுமொரு புகழ்பெற்ற மாடலான நெக்ஸான் சப்காம்பேக்ட் எஸ்யூவி காரில் பயன்படுத்தி வருகின்றது. இந்த கார் அதிகபட்சமாக 120 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

ஆனால், அல்ட்ராஸ் டர்போ தேர்வில் இடம்பெறும் 1.2 லிட்டர் டர்போசார்ஜட் எஞ்ஜின் 110 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனிலேயே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புதிய எஞ்ஜினுடன் சேர்த்து டாடா நிறுவனம் புதிய மரினா நீல நிறத்தையும் இக்காரில் வழங்க இருக்கின்றது.

இதுபோன்ற பிரீமியம் வசதிகள் காரணமாக புதிய அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் தேர்வு உயர்நிலை வேரியண்டாகவே விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எக்ஸ்எம் முதல் எக்ஸ்இசட் (0) ஆகிய தேர்வுகளில் இது எதிர்பார்க்கப்படுகின்றது.

அல்ட்ராஸ் ஓர் அதிக பாதுகாப்பு திறன் கொண்டா காராகும். குளோபல் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட் பரிசோதனையில் இக்கார் ஐந்திற்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றது. இதனையடுத்தே இந்தியாவின் பாதுகாப்பான கார்களின் பட்டியலில் இது இணைந்தது.