Just In
- 17 min ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 1 hr ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 1 hr ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 2 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு... கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தியது டாடா!
உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதையடுத்து, தனது கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். விலை உயர்வுக்கான காரணம், அதிபட்சமாக எவ்வளவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கடந்த ஓர் ஆண்டு காலமாக கொரோனா பிரச்னை காரணமாக, கார் விலையை உயர்த்தும் வாய்ப்பு இல்லாத நிலை தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இருந்து கார் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளதால், புத்தாண்டில் கார் விலையை உயர்த்துவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு செய்தன.
அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் விலையை ரூ.24,000 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஜனவரி 22 (நேற்று) முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் தயாரிப்புக்கு தேவைப்படும் குறிப்பிட்ட சில முக்கிய மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகளால், விலை அதிகரித்துள்ளது. இதனால், கார்களின் உற்பத்தி செலவீனம் கணிசமாக உயர்ந்துள்ளது.
மேலும், கார் தயாரிப்புக்கான ஸ்டீல் விலை அதிகரிப்பு, செமி கன்டக்டர் எனப்படும் முக்கிய மின்னணு உதிரிபாகத்திற்கான தட்டுப்பாடு போன்றவற்றாலும், விலை உயர்வை கையில் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, கடந்த 21ந் தேதி வரை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு பழைய விலையிலேயே கார் டெலிவிரி கொடுக்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு இந்த விலை உயர்வு மூலமாக எந்த பாதிப்பும் இல்லை என்பது ஆறுதல் தரும் விஷயமாக இருக்கும்.
மாருதி, மஹிந்திரா நிறுவனங்களை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது புத்தாண்டில் கார் வாங்க காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
இந்த சூழலில், தனது விற்பனை வளர்ச்சியை தக்க வைக்கும் விதத்தில் புதிய மாடல்களை களமிறக்கும் முனைப்பில் டாடா மோட்டார்ஸ் உள்ளது. அதன்படி, அல்ட்ராஸ் காரின் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல் மற்றும் புதிய சஃபாரி 7 சீட்டர் எஸ்யூவி மாடல்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?