Just In
- 1 hr ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 2 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 4 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 5 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
Don't Miss!
- Movies Actor Vijay: ஏப்ரலில் வெளியாகும் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அர்ச்சனா கல்பாத்தி உறுதி!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
தமிழக முதல்வரை நேரில் சந்தித்த Tata Group தலைவர்... Ford தொழிலாளர்களுக்கு விரைவில் நல்ல பதில் காத்திருக்கு!
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை டாடா குழுமத்தின் (Tata Group) தலைவர் சந்திரசேகரன் நேரில் சந்தித்து ஆலோசித்திருக்கின்றார். ஃபோர்டு () நிறுவனத்திற்கு சொந்தமான சென்னையை ஆலையைக் கையகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையே இந்த சந்திப்பின்போது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே காணலாம், வாங்க.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஃபோர்டு (Ford). இந்நிறுவனம், இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அண்மையில் தகவல் வெளியிட்டது. வெளியேற்றத்தைத் தொடர்ந்து, நிறுவனத்தின் பிரபல கார் மாடல்களான ஈகோஸ்போர்ட், ஃபிகோ, அஸ்பயர் மற்றும் எண்டீயோவர் ஆகியவற்றின் வர்த்தகத்தையும் நாட்டில் நிறுத்துவதாக நிறுவனம் அறிவித்தது.
ஃபோர்டு நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு அது பேரிடியாக அமைந்தது. தற்போது அவர்களின் நிலை கேள்விக் குறியாக மாறியுள்ளது. இந்த நிலையில், ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை உற்பத்தி ஆலையை இந்திய வாகன உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் டாடா மோட்டார்ஸ் (Tata Motor) நிறுவனம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஃபோர்டு நிறுவனம் 2.5 பில்லியன் முதலீட்டில் சென்னை மற்றும் சனாந்த் (குஜராத்) ஆகிய இரு பகுதிகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டிருக்கின்றது. இதில், சென்னை தொழிற்சாலையை வாங்கும் பணிகளிலேயே டாடா மோட்டார்ஸ் தற்போது களமிறங்கியிருக்கின்றது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை, டாடா குழுமத்தின் தலைவர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றார்.
ஃபோர்டு ஆலை கையகப்படுத்துதல் பற்றிய முக்கிய ஆலோசனைகள் இந்த சந்திப்பின்போது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வின்போது கிராமப்புறத் தொழில்துறை அமைச்சர் டிஎம் அன்பரசன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.
மேலும், பேச்சுவார்த்தை என்ன நிலையில் இருக்கின்றது என்பது பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆகையால், முக்கிய விபரங்கள் இன்னும் வெளியாகாத நிலையே தென்படுகின்றது.
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் வர்த்தகம் மற்றும் வாகன உற்பத்தியை என அனைத்தையுமே நிறுத்தியிருக்கின்றது. அதேவேலையில் தனது சென்னை ஆலையை வெளிநாடுகளுக்கான வாகன எஞ்ஜின்களை ஏற்றுமதி செய்வதற்காக பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது.
தனது இந்தியா வெளியேற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு இந்த தகவலையும் நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. தொடர் விற்பனை சரிவு, வர்த்தகம் பாதிப்பு உள்ளிட்டவையே ஃபோர்டு இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
ஆரம்பத்தில் லட்சக் கணக்கில் வாகனங்களை உற்பத்தி செய்து வந்த நிறுவனம் சமீப காலமாக ஆயிரக் கணக்கில் மட்டுமே வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது. அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கானவை ஆகும். இதுமாதிரியான இக்கட்டான சூழ்நிலையால் தொடர் நிதியிழப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டது. எனவே இதனை சமாளிக்கும் பொருட்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக இந்தியாவை விட்டு வெளியேறியது.
இந்த நிலையிலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தமிழக முதலமைச்சர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ஃபோர்டு ஆலையை கையகப்படுத்தும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. மாநிலத்தில் முதலீட்டை ஈர்க்கும் பொருட்டு தற்போது ஆளும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே தற்போதைய பேச்சுவார்த்தையும் நடை பெற்றிருக்கின்றது.
தற்போது டாடா நிறுவனம் இந்தியாவில் பஞ்ச் எனும் புதுமுக மைக்ரோ எஸ்யூவி ரக காரை இந்தியாவில் களமிறக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மிக சமீபத்தில் நிறுவனம் இக்காரை வெளியீடு செய்தது. இக்காரின்மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வந்த நிலையில் வெளியீட்டு நிகழ்வை டாடா கடந்த 4ம் தேதி செய்தது. இதைத்தொடர்ந்து, மிக விரைவில் விற்பனைக்கான அறிமுகத்தையும் நிறுவனம் செய்ய இருக்கின்றது. தீபாவளியை முன்னிட்டு முன்கூட்டியே இக்கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுக்கின்றது. ஏற்கனவே பஞ்ச் காருக்கான புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கிவிட்டன. ரூ.21,000 ஆயிரம் என்ற முன்-தொகையில் காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.
-
ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு