Just In
- 2 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 3 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 5 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 9 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
Don't Miss!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- News "உயிரை பறித்த விபரீத விளையாட்டு.." ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்!
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Movies ஜப்பான் வாடை வருதே.. தலைவர் 171 போஸ்டரை ட்ரோல் செய்யும் விஜய் ஃபேன்ஸ்.. லியோவுக்கு பதிலடியா?
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
டாடா கார்களின் விலை உயர்கின்றன... எத்தனை சதவீதம் உயருகிறது தெரியுமா?.. முடிஞ்சா இன்னைக்கே புக் செஞ்சிடுங்க!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எத்தனை சதவீதம் வரை டாடா வாகனங்களின் விலை உயர இருக்கின்றது என்பதுகுறித்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், அதன் தயாரிப்புகளின் விலையைக் கணிசமாக உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இருக்கும் விலையில் 1.8 சதவீதம் உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இப்புதிய விலையுயர்வு நாளை முதல் (மே 8) அமலுக்கு வர இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால், இன்றைய தினத்திற்குள் புக் செய்பவர்களுக்கு பழைய விலையின் (விலையுயர்வு இல்லாமல்)-படியே புதிய கார்களை டாடா விற்பனைச் செய்ய இருக்கின்றது.
கார் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவின் தலைவர் சைலேஷ் சந்த்ரா கூறியுள்ளார். தொடர்ந்து, புதிய விலையுயர்வு மே7ம் தேதிக்குள் புக் செய்தவர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அவர் கூறினார்.
முன்னதாக கடந்த 2021 ஜனவரியில் ரூ. 26 ஆயிரம் வரை விலையுயர்வை செய்திருந்தது டாடா மோட்டார்ஸ். இதற்கு அடுத்தபடியாக தற்போது மீண்டும் தனது வாகனங்களின் விலையை உயர்த்தும் முயற்சியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.
டாடாவின் இந்த நடவடிக்கை அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 1.8 சதவீத விலையுயர்வு என்பது மாடல் மற்றும் வேரியண்டைப் பொருத்து ஏற-குறைய அமையும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021 ஏப்ரலில் டாடா மோட்டார்ஸின் வாகன விற்பனை கடுமையாக சரிவைச் சந்தித்தது. 2020 ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் 41 சதவீதம் வரை நிறுவனத்தின் வாகன விற்பனை குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தளவு கடுமையான சரிவை நிறுவனம் சந்தித்திருக்கின்ற வேலையிலும் விலையுயர்வுகுறித்த தகவலை டாடா வெளியிட்டுள்ளது.
அதேசமயம், டாடா நிறுவனத்தின் புதுமுக வருகையான சஃபாரி எஸ்யூவி காருக்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவி வருவதாகவும் ஒரு பக்கம் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. கடந்த மாதம் வெளியாகிய தகவலின்படி, இக்காருக்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீடித்து வருவதாக கூறப்படுகின்றது.
இதுதவிர, டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், நெக்ஸான், நெக்ஸான் இவி மற்றும் ஹாரியர் ஆகிய கார்களுக்கும் கணிசமான காத்திருப்பு காலம் நீடித்து வருகின்றது. மாநிலம் மற்றும் நகரங்களைப் பொருத்து காத்திருப்பு காலம் மாறுபட்டு காணப்படுகின்றது.