Just In
- 3 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 3 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 4 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 4 hrs ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஒரே நாளில் 70 புதிய ஷோரூம்கள்! தென்னிந்தியாவில் Tata செய்த தரமான சம்பவம்! மிரண்டு நிற்கும் இந்திய வாகன உலகம்!
நாட்டின் மாபெரும் வாகன உற்பத்தி நிறுவனமான Tata Motors தென்னிந்தியாவை மையப்படுத்தி புதிதாக 70 விற்பனையகங்களை திறந்து வைத்திருக்கின்றது. இவையனைத்தும் இன்று (வெள்ளிக் கிழமை) ஒரே நாளில் திறக்கப்பட்டவை ஆகும். இதுகுறித்த முக்கிய விபரங்களைக் கீழே காணலாம்.
இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனம் என்ற புகழுக்கு உரிய நிறுவனமாக Tata Motors இருக்கின்றது. இந்த பெயருக்கான தனித்துவத்தை நிலை நாட்டும் வகையில் ஓர் நடவடிக்கையில் டாடா தற்போது களமிறங்கியிருக்கின்றது. நிறுவனம் ஒரே நாளில் 70 புத்தம் புதிய விற்பனையகங்களை திறந்து, தான் ஒரு ஜாம்பவான் நிறுவனம் என்பதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
புதிதாக திறக்கப்பட்டிருக்கும் அனைத்து விற்பனையகங்களும் தென்னிந்தியாவை மட்டுமே மையப்படுத்தி திறக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. தென்னிந்தியர்களைக் கவர்ந்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் முக்கிய நகர்புற பகுதிகளில் புதிய விற்பனையகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.
தனது புதிய தயாரிப்புகள் மற்றும் மின்சார வாகன தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் நிறுவனம் இந்த நடவடிக்கையில் களமிறங்கியிருக்கின்றது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலேயே புதிதாக ஷோரும்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.
புதிய ஷோரூம்களின் திறப்பால் தென்னிந்தியாவில் நிறுவனத்தின் விற்பனையகங்கள் சற்று அதிகரித்திருக்கின்றது. ஆம், ஒட்டுமொத்த விற்பனையகங்களின் எண்ணிக்கை 272ஆக உயர்ந்திருக்கின்றது. அதுவே இந்திய அளவில் பார்த்தோமேயானால் நிறுவனத்தின்கீழ் ஒட்டுமொத்தமாக 980 விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதன் வாயிலாக, டாடா நிறுவனம் புதிய தயாரிப்புகளின் வாயிலாக மட்டுமின்றி புதிய ஷோரூம்கள் வாயிலாகவும் மக்களை கவரும் நடவடிக்கையில் களமிறங்கியிருப்பது தெரிய வருகின்றது. நிறுவனம் மிக விரைவில் புதிய பஞ்ச் எனும் குட்டி எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.
விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதை முன்னிட்டு காரை சாலையில் வைத்து பல பரீட்சையில் ஈடுபடுத்தி வருகின்றது. அந்தவகையில், அண்மையில் கரடு-முரடான மலை பாதையில் வைத்து காரை சோதனைக்கு உட்படுத்தியது. இதுமட்டுமின்றி, காரின் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமாக அதுகுறித்த புகைப்படங்களை நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.
அறிமுகத்திற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மக்களே இப்போதே அக்காரின் பக்கம் ஈர்க்கும் முன்னிட்டு படங்களை வெளியிடுதல் மற்றும் காரின் சிறப்பம்சங்கள் குறித்து வெளியிடுதல் உள்ளிட்ட செயல்களில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தற்போது ஒட்டுமொத்த வாகன சந்தையுமே திரும்பி பார்க்கும் வகையில் ஒரே நாளில் 70 புதிய ஷோரும்களை டாடா திறந்திருக்கின்றது.
இந்நிகழ்வுகுறித்து நிறுவனத்தின் பயணிகள் வாகன வணிக பிரிவின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவை துறையின் துணைத் தலைவர் ராஜன் அம்பா கூறியதாது, "ஒட்டுமொத்த வாகன தொழில்துறையில் தென்னிந்தியா 28% பங்களிப்பு செய்கிறது. இதில் நாங்கள் 12.1 சதவீத பங்களிப்புடன் செயல்பட்டு வருகின்றோம். வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அர்ப்பணிப்புடன் சேவை வழங்கும் வகையில் மேலும் புதிய விற்பனையகங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன" என்றார்.
-
இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!
-
எதை பாக்கறதுனே தெரியல! அவங்களை மாதிரியே காரும் அழகா இருக்கு! இவங்க யார்னு அடையாளம் தெரியுதா?
-
ஹீரோ மேவ்ரிக் டெலிவரி பணிகள் தொடங்கிருச்சு... சந்தோஷமா வந்து வாங்கிட்டு போன வாடிக்கையாளர்கள்!! எவ்ளோ சந்தோஷம்!