விழிப்புணர்வு அடைந்த இந்தியர்கள்... டாடாவின் பாதுகாப்பான கார்களுக்கு பெரும் வரவேற்பு... 422 சதவீத வளர்ச்சி!

டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விழிப்புணர்வு அடைந்த இந்தியர்கள்... டாடாவின் பாதுகாப்பான கார்களுக்கு பெரும் வரவேற்பு... 422 சதவீத வளர்ச்சி!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் இந்திய சந்தையில் 29,655 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 422 சதவீத வளர்ச்சியாகும்! ஏனெனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 5,676 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

விழிப்புணர்வு அடைந்த இந்தியர்கள்... டாடாவின் பாதுகாப்பான கார்களுக்கு பெரும் வரவேற்பு... 422 சதவீத வளர்ச்சி!

அதே சமயம் நடப்பாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போதும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 27,224 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதன்பின் வந்த மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 29,655 ஆக உயர்ந்துள்ளது.

விழிப்புணர்வு அடைந்த இந்தியர்கள்... டாடாவின் பாதுகாப்பான கார்களுக்கு பெரும் வரவேற்பு... 422 சதவீத வளர்ச்சி!

இந்த வகையில் பார்த்தால், விற்பனையில் 9 சதவீத வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. கியா, மஹிந்திரா, டொயோட்டா மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பின்னால்தான் உள்ளன.

விழிப்புணர்வு அடைந்த இந்தியர்கள்... டாடாவின் பாதுகாப்பான கார்களுக்கு பெரும் வரவேற்பு... 422 சதவீத வளர்ச்சி!

முதல் இரண்டு இடங்களில் மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சஃபாரி காரை நடப்பாண்டு அறிமுகம் செய்துள்ளது. டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் 7 சீட்டர் வெர்ஷனான புதிய டாடா சஃபாரிக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விழிப்புணர்வு அடைந்த இந்தியர்கள்... டாடாவின் பாதுகாப்பான கார்களுக்கு பெரும் வரவேற்பு... 422 சதவீத வளர்ச்சி!

இதுதவிர டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் டாடா நெக்ஸான் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ஆகிய கார்களும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளன. இவை இரண்டுமே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விழிப்புணர்வு அடைந்த இந்தியர்கள்... டாடாவின் பாதுகாப்பான கார்களுக்கு பெரும் வரவேற்பு... 422 சதவீத வளர்ச்சி!

இந்த சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் காரணமாகவே, டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. அத்துடன் டியாகோ, டிகோர் மற்றும் ஹாரியர் ஆகிய கார்களும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தகுந்த விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளன.

விழிப்புணர்வு அடைந்த இந்தியர்கள்... டாடாவின் பாதுகாப்பான கார்களுக்கு பெரும் வரவேற்பு... 422 சதவீத வளர்ச்சி!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் சமீப காலமாக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை அதிகரித்து கொண்டே வருவதற்கு இதுதான் மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்கள் பாதுகாப்பில் தலைசிறந்து விளங்குகின்றன.

விழிப்புணர்வு அடைந்த இந்தியர்கள்... டாடாவின் பாதுகாப்பான கார்களுக்கு பெரும் வரவேற்பு... 422 சதவீத வளர்ச்சி!

சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் பலமுறை காப்பாற்றியுள்ளன. இதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் வலுவான கட்டுமான தரமே மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. வரும் காலங்களிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata Motors Registers 422 Per cent Sales Growth In March 2021 - Here Are All The Details. Read in Tamil
Story first published: Thursday, April 1, 2021, 15:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X