Just In
- 47 min ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 1 hr ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 1 hr ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைநத பழனிச்சாமி!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜாகுவார் லேண்ட்ரோவரால் தடுமாற்றம் கண்ட டாடா மோட்டார்ஸ் பங்குகள்... காரணம் இதுதான்!
ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் வருவாய் மதிப்பீடு குறித்த தகவலால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை திடீரென சரிவு கண்டது. இதனால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு சந்தையில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்று வருவதே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. குறிப்பாக, பயணிகள் வாகன விற்பனையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகளை உற்று கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு நேற்றுமுன்தினம் (செவ்வாய் கிழமை) பிற்பகல் தடாலடியாக குறைந்தது. தேசிய பங்கு சந்தையில் 10 சதவீதம் வரையிலும், மும்பை பங்கு சந்தையில் 8.29 சதவீதம் குறைந்தது. இதனால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பங்கு சந்தையிலும் இந்த விஷயத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் வருவாய் குறித்தத வெளியானத் தகவல்தான் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு திடீரென வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
அதாவது, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு காலத்தைவிட இரண்டாவது காலாண்டு காலத்தில் (ஜூன்- ஆகஸ்ட்) கார் உற்பத்திக்கு தேவைப்படும் சிப் எனப்படும் மின்னணு உதிரிபாகங்களுக்கு கடும் தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக, ஜாகுவார் லேண்ட்ரோவர் வருவாயில் அதிக பின்னடைவு இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் கணிப்பு வெளியிட்டது.
ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களுக்கான தேவை தொடர்ந்து வலுவான நிலையில் இருந்தாலும், சிப் பிரச்னை காரணமாக ஒரு பில்லியன் பவுண்ட் மதிப்புக்கு வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக டாடா மோட்டார்ஸ் கணிப்பு வெளியிட்டது.
ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் வருவாயில் பின்னடைவு ஏற்படும் என்று கூறிய காரணத்தால், அந்நிறுவனத்தின் வருவாயிலும் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாகவே, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு நேற்று திடீரென குறைய காரணமாக அமைந்தது.
அதேநேரத்தில், சிப் எனப்படும் மின்னணு உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு இருந்தாலும், கார்களுக்கான தேவை மற்றும் வர்த்தகம் வரும் மாதங்களில் வலுவாக இருக்கும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனால், இன்று டாடா மோட்டார்ஸ் பங்குகள் மதிப்பு சற்றே உயரத் துவங்கி முதலீட்டாளர்களை ஆசுவாசப்படுத்தி உள்ளது.