Just In
- 11 min ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 2 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 6 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 7 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
Don't Miss!
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நொறுங்கி போகும் டின்-கேன்களுக்கு மத்தியில் சேஃப்டியான கார்கள்! சொல்லி அடிக்கும் டாடா! வேற லெவலுக்கு போயிருச்சு
கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான தனது கார் சேல்ஸ் ரிப்போர்ட்டை தற்போது வெளியிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 25,730 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 21,199 ஆக மட்டும்தான் இருந்தது.
இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார் விற்பனை 21 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு ஐசி இன்ஜின் கார்கள்தான் முக்கியமான காரணம். கடந்த செப்டம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 24,652 ஐசி இன்ஜின் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 20,891 ஐசி இன்ஜின் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.
எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்களின் விற்பனை 18 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதேபோல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையும் சிறப்பாக உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 1,078 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
ஆனால் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 308 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை 250 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐசி இன்ஜின் கார்கள், எலெக்ட்ரிக் கார்கள் என எப்படி பார்த்தாலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில், டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், நெக்ஸான், ஹாரியர் மற்றும் புதிய சஃபாரி உள்ளிட்ட ஐசி இன்ஜின் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் ஆகிய இரண்டு கார்களும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை தேடி தந்துள்ளன.
இந்தியாவில் சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை அதிகரித்து கொண்டே வருவதற்கு பாதுகாப்பு பலமாக இருப்பதுதான் முக்கியமான காரணம். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் சாலை விபத்துக்களில் இருந்து பலமுறை பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளன. விபத்தில் சிக்கிய காரில் இருந்து, சிறு கீறல் கூட இல்லாமல் வெளியே நடந்து வந்தவர்கள் ஏராளம்.
இதுகுறித்த செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பலமுறை பதிவு செய்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால், டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் மற்றும் நெக்ஸான் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களையும் விற்பனை செய்து வருகிறது.
இதில், டிகோர் எலெக்ட்ரிக் காரின் புதிய மாடல் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மறுபக்கம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற மகுடத்தை தலையில் சூடியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த சூழலில், எதிர்வரும் பண்டிகை காலத்திலும் கார்களுக்கான டிமாண்ட் தொடர்ந்து அதிக அளவிலேயே இருக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது. ஆனால் செமி-கண்டக்டர் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் கார் உற்பத்தியில் சவாலை ஏற்படுத்தி வருகிறது. செமி-கண்டக்டர் பற்றாக்குறையால் தற்போது உலகம் முழுவதும் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த பிரச்னையை சமாளித்து தேவையை பூர்த்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த பிரச்னைகளுக்கு மத்தியில் பன்ச் (Tata Punch) என்ற புத்தம் புதிய காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
டாடா பன்ச் கார் மீது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே டாடா பன்ச் விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பன்ச் கார் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் புதிய சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!