Just In
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வெளியீடானது Tata Punch... இப்போவே புக் செய்யலாம்... ரொம்ப கம்மியான முன்தொகையில்!
Tata Punch மைக்ரோ எஸ்யூவி கார் இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த முழு விபரத்தைக் கீழே காணலாம்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி (Punch micro SUV) ரக காரை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் இன்று (அக்டோபர் 4) இந்தியாவில் வெளியீடு செய்தது. பட்ஜெட் வாகன பிரியர்கள் மத்தியில் இந்த காரின் அறிமுகம் மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
காரின் அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பஞ்சிற்கான புக்கிங்கை ஏற்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. ரூ. 21,000 என்ற முன்-தொகையில் காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. நாடு முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷோரூம்களின் வாயிலாக புக்கிங் பணிகள் மேற்கொள்ளப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
இத்துடன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்திலும் காருக்கான புக்கிங் ஏற்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா பஞ்ச் நான்கு விதமான பெர்சோனாவில் விற்பனைக்குக் கிடைக்கும். ப்யூர், அட்வென்சர், அக்காம்ப்ளிஷ் மற்றும் கிரியேட்டீவ் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.
ப்யூர்:
இதில் ப்யூர் தேர்வில் விற்பனைக்கு கிடைக்க இருக்கும் பஞ்ச் காரில் ஆர்15 வீல்கள், பன்முக டிரைவிங் மோட்கள், எஞ்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி, இரு வித நிற தேர்வு (சாம்பல் மற்றும் வெள்ளை) ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன.
அட்வென்சர்:
அட்வென்சர் தேர்வில் 4 இன்ச் அளவு கொண்ட ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல்கள், பவர் விண்டோ, ரிமோட் கீ, மிஸ்ட் கிரீன் நிற தேர்வு ஆகியை வழங்கப்பட இருக்கின்றன. இத்துடன். கிரே மற்றும் வெள்ளை ஆகிய நிற தேர்விலும் அட்வென்சர் விற்பனைக்குக் கிடைக்கும்.
அக்காம்ப்ளிஷ்:
7 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன்), மீட்டியோர் ப்ரோன்ஸே நிறம், எல்இடி மின் விளக்குகள், ஹார்மன் சவுண்ட் சிஸ்டம், பின் பக்கத்தில் கேமிரா, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய வசதிகளுடன் அக்காம்ப்ளிஷ் தேர்வு விற்பனைக்குக் கிடைக்கும்.
கிரியேட்டீவ்:
மேலே பார்த்த தேர்வுகளைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்கள் வசதிகள் கொண்டதாக கிரியேட்டீவ் காட்சியளிக்கின்றது. புரெஜெக்டர் ஹெட்லேம்ப், ஆர்16 டைமண்ட் கட் அலாய் வீல்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ், ஆட்டோ வைப்பர், ஆட்டோ ஏசி, கூல்டு க்ளோவ் பாக்ஸ், லெதர் விராப்பட் ஸ்டியரிங் வீல், ஐஆர்ஏ கார் இணைப்பு மற்றும் இரு நிற கேபின் என எக்கசக்க அம்சங்களுடன் கிரியேட்டீவ் தேர்வு விற்பனைக்குக் கிடைக்கும்.
டாடா நிறுவனம் இப்புதுமுக பஞ்ச் காரை அதன் ஆல்ஃபா பிளாட்பாரத்தில் வைத்து கட்டமைத்து வருகின்றது. அல்ட்ராஸ் ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற பிரீமியம் தர ஹேட்ச்பேக் வாகனமாகும். எனவே இக்காரை போலவே பஞ்ச்-ம் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட வாகனமாக உருவாகியிருக்கின்றது.
90 டிகிரி திறப்பு வசதிக் கொண்ட கதவுகள், 366 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளிட்ட வசதிகள் பஞ்ச்-இல் வழங்கப்பட்டுள்ளன. மேலும், புதிய டாடா பஞ்ச் அளவிலும் சற்று பெரிய காரைப் போன்று காட்சியளிக்கின்றது. 3,840 மிமீ நீளத்திலும், 1,800 மிமீ அகலத்திலும், 1,635 மிமீ உயரத்திலும் மற்றும் 2,450 மிமீ வீல்பேஸ் அளவிலும் இந்த கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த அளவுகள் அதன் போட்டியாளர்களைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்துடன், அதிக பாதுகாப்பு வசதியாக இரட்டை ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் ஸ்வே கன்ட்ரோல் எனும் புத்தம் புதிய சிறப்பு பாதுகாப்பு அம்சம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, டிகோர், டியாகோ மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார் மாடல்களில் வழங்கப்பட்டிருக்கும் அதே எஞ்ஜின் ஆப்ஷனே பஞ்ச்-லும் வழங்கப்பட உள்ளது.
1.2 லிட்டர், 3-சிலிண்டர், ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒற்றை எஞ்ஜின் தேர்வில் மட்டுமே பஞ்ச் கிடைக்கும் என தற்போது நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன், டர்போசார்ஜட் எஞ்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட இருக்கின்றது.
டாடா பஞ்ச் மஹிந்திரா எக்ஸ்யூவி100, மாருதி இக்னிஸ் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இக்காரின் விலை குறித்த விபரங்கள் மிக விரைவில் வெளியிடப்பட இருக்கின்றது. ரூ. 5.5 லட்சம் தொடங்கி ரூ. 8 லட்சத்திற்கும் குறைவான விலையில் இக்கார் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்