கர்ப்பிணி பெண், சிறுவன் பாதுகாப்பாக இருக்க இந்த கார்தான் காரணம்! டெஸ்லா எலெக்ட்ரிக் கார் பயனர் நெகிழ்ச்சி!
எனது கர்ப்பிணி பெண் தோழி மற்றும் மகன் ஆகியோர் பாதுகாப்பாக இருக்க டெஸ்லா மாடல்3 எலெக்ட்ரிக் கார்தான் காரணம் என அக்காரை பயன்படுத்தி வரும் நபர் நெகிழ்ச்சி தகவலை பகிர்ந்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

டெஸ்லா மாடல் 3 மின்சார கார் பயனர் ஒருவர், அவரது டுவிட்டர் பக்கத்தில், தனது பெண் தோழி மற்றும் அவரது மகன் உயிருடன் தற்போது பாதுகாப்பாக இருப்பதற்கு காரணமே இந்த கார்தான் என நெகிழ வைக்கும் தகவலை பகிர்ந்திருக்கின்றார்.

டெஸ்லா மாடல் 3 மின்சார கார் எந்தவகையில் அவருக்கு உதவியாக இருந்தது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் குறிப்பிட்ட சில சொகுசு கார் மாடல்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றது டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 எலெக்ட்ரிக் கார்.

இந்த காரே தனது பெண் கர்ப்பிணி தோழி மற்றும் மகன் ஆகியோர் பாதுகாப்பாக இருக்க காரணம் என தெரிவித்திருக்கின்றார். மிக சமீபத்தில் இந்த டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் எதிர்பாராத விதமாக விபத்துக்கு ஆளாகியிருக்கின்றது.

அந்த விபத்தின்போது சாமர்த்தியமாக செயல்பட்டு மாடல் 3 மின்சார கார் தனக்குள் இருந்த அனைவரையும் பத்திரமாக பாதுகாத்திருக்கின்றது. ஆமாங்க, டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரில் தானியங்கி தொழில்நுட்ப வசதி வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த தொழில்நுட்பமே விபத்தின்போது சமார்த்தியமாக செயல்பட்டு காருக்குள் இருந்த அனைவரையும் பாதுகாத்திருக்கின்றது. மார்கோ டிஇசட்ஓ (Marco DZO) எனும் டுவிட்டர் பயனரே இத்தகவலை கீச் (டுவீட்)இன் வாயிலாக வெளியுலகிற்கு தெரியப்படுத்தியிருக்கின்றார்.

விபத்திற்கு எதிரில் தாறுமாறாக வந்த ஜீப் ரேங்க்ளர் காரே காரணம் என மார்கோ தெரிவித்திருக்கின்றார். அந்த காருடன் மோதிவிட கூடாது என்பதற்காக தங்களுடைய (டெஸ்லா மாடல் 3) காரை திருப்பியதாகவும், இருப்பினும், அந்த கார் தங்கள் மீது மோதிவிட்டு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்கோ தன்னுடைய காரை திருப்புதவதற்கு முன்னரே டெஸ்லா மாடல் 3 காரில் இடம்பெற்றிருந்த தானியங்கி தொழில்நுட்ப வசதி அக்காரை வேறு திசையில் திருப்பத் தொடங்கிவிட்டதாகவும், அது மேலும் தங்களைப் பாதுகாக்கும் வகையில் அமைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார்.

இந்த விபத்து சம்பவத்தில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அனைவரும் சிறு சிறு காயங்களுடன் மீண்டிருக்கின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய ஜீப் ரேங்களரை தேடிபிடித்து விசாரித்ததில், சம்பவத்தின்போது அக்காரை ஓட்டி வந்தவர் மது போதையில் இருந்தது தெரிய வந்திருக்கின்றது.

இதன் காரணத்தினாலயே அவர் கண்மூடித் தனமாக காரை ஓட்டி வந்திருக்கின்றார். இருப்பினும், டெஸ்லா மாடல் 3 மின்சார காரில் இடம் பெற்றிருந்த தானியங்கி வசதி மற்றும் ஓட்டுநரின் சாமர்த்தியம் ஆகியவற்றால் அனைவரும் தற்போது பாதுகாப்பாக இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








