Just In
- 33 min ago தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- 2 hrs ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 7 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 7 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
Don't Miss!
- News நாளை வாக்குப்பதிவு.. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.90 லட்சம் போலீசார்.. ஏற்பாடுகள் தீவிரம்
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எடிசன் உற்பத்தி திட்டம் ரத்து: எலான் மஸ்க் அறிவிப்பு!
அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி திட்டம் ரத்து செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
அதிதிறன் வாய்ந்த பேட்டரி மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் விற்பனையில் இருக்கும் டெஸ்லா மின்சார கார்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மின்சார கார்களின் தலை எழுத்தை மாற்றி எழுதிய பெருமையும் டெஸ்லா நிறுவனத்திற்கு உண்டு.
இந்த நிலையில், அதிக தூரம் பயணிக்கும் திறன் வாய்ந்த மாடல் எஸ் சொகுசு செடான் காரை உருவாக்கும் திட்டத்தை டெஸ்லா ஈடுபட்டு இருந்தது. மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் என்ற பெயரில் இந்த கார் குறிப்பிடப்பட்டது.
மாடல் எஸ் பிளெய்ட் எடிசன் காரைவிட இந்த பிளெய்ட் ப்ளஸ் எடிசன் அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டதால், உலக அளவில் இந்த கார் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 643 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
எனவே, இந்த மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் மின்சார கார் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று டெஸ்லா நிறுவனம் தெரிவித்தது. கொரோனா பிரச்னை காரணமாக, அடுத்த ஆண்டுக்கு இந்த காரின் அறிமுகம் தள்ளிப்போடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எடிசன் காரின் உற்பத்திக்கு கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடுவதாக டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் சமூக ஊடகம் மூலமாக அறிவித்துள்ளார்.
அதாவது, மாடல் எஸ் பிளெய்ட் எடிசன் மாடலே மிகச் சிறப்பான ரேஞ்ச் கொண்டதாக இருப்பதால், பிளெய்ட் ப்ளஸ் மாடலை களமிறக்கும் திட்டத்தை கைவிடுவதாகவும் அவர் காரணம் தெரிவித்துள்ளார். இது டெஸ்லா பிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனிடையே, உலகின் அதிவேக தயாரிப்பு நிலை மாடலாக கூறப்படும் டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் எலெக்ட்ரிக் காரின் டெலிவிரிப் பணிகள் வரும் 10ந் தேதி முதல் துவங்கப்பட உள்ளதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 2 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் எட்டிவிடும் என்பதுடன் குவார்ட்டர் மைல் தொலைவை 9.3 வினாடிகளில் கடந்துவிடுமாம்.
இந்த மாடல் எஸ் பிளெய்ட் எடிசன் கார் மூன்று உயர் திறன் கொண்ட மின்சார மோட்டார்களுடன் வருகிறது. அதிகபட்சமாக 1020 பிஎச்பி பவரை வழங்கும். மணிக்கு 322 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை வாய்ந்தது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 627 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று டெஸ்லா மார் தட்டுகிறது.