Just In
- 1 hr ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 2 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 4 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 9 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- News இன்டர்நேஷனல் பிரஷர்.. மோடியை தீவிரமாக கவனிக்கும் உலக நாடுகள்.. சீக்ரெட்டை உடைத்த எக்ஸ்பர்ட்
- Movies படு மோசமான படுக்கையறை காட்சி.. ரஜினியின் ரீல் மகளை திட்டிதீர்க்கும் பேன்ஸ்!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கை நழுவிய வாய்ப்பு! போட்டியில் வென்றது கர்நாடகா... தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு டாடா காட்டிய டெஸ்லா!
டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி ஆலை எங்கு அமைய இருக்கின்றது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் இருக்கின்றன. பல ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில் இப்போதே இக்காரை பெறுவதற்கான சூழல் உருவாகியிருக்கின்றது. டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக மிக சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.
இந்த தகவலை டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உறுதி செய்தனர். இந்த நிலையில் இந்நிறுவனத்தின் வாகன தயாரிப்பு ஆலை எங்கு அமைய இருக்கின்றது என்பதே பெருத்த சந்தேகமாக இருந்து வந்தது.
உற்பத்தி ஆலையை தொடங்குவதற்கான அழைப்பை பல மாதங்களுக்கு முன்பே தமிழகம் விடுத்திருந்த நிலையில், போட்டியாக மஹாராஷ்டிரா மாநிலமும் இதற்கான அழைப்பை டெஸ்லாவிற்கு கொடுத்திருந்தது. ஆனால், டெஸ்லா நிறுவனமே தங்களின் ஆராய்ச்சி மற்றும் தொழிற்நுட்ப மையத்தை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அமைக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.
இது இந்தியர்களுக்கு மேலும் பெருத்த சந்தேகத்தை எழுப்பியது. தமிழகம் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய இரு மாநில அரசுகளும் போட்டிக் கொண்டிருக்கின்ற வேலையில் அதன் பார்வை கர்நாடகா பக்கம் திரும்பியது வியப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் இந்த மூன்று மாநிலங்களில் எந்த மாநிலத்தில் டெஸ்லா உற்பத்தி ஆலை தொடங்கப்படும் என்ற கேள்வியெழும்பியது. இந்த கேள்விக்கே தற்போது முற்று வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அதன் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை கர்நாடகாவில் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெஸ்லா பதிவு செய்த விண்ணப்பத்தின் வாயிலாக இந்த தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஆர்&டி யூனிட்டிலேயே இந்நிறுவனம் தயாரிப்பு ஆலையை தொடங்கப்பட இருக்கின்றது. இதுகுறித்த தகவலை கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தனது டுவிட்டர் பதிவின் வாயிலாக உறுதி செய்திருக்கின்றார்.
இதுகுறித்து அவர் கூறியாதவது, "பசுமை இயக்கத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தை கர்நாடகா வழிநடத்தும். மின்சார வாகன உற்பத்தியாளர் டெஸ்லா விரைவில் இந்தியாவில் பெங்களூருவின் ஆர்&டி பிரிவில் தனது செயல்பாடுகளை தொடங்கவுள்ளார். நான் எலன்மஸ்கினை இந்தியா மற்றும் கர்நாடகாவிற்கு வரவேற்கிறேன், அவருக்கு நல்வாழ்த்துக்கள்" என கூறியிருக்கின்றார்.
கடந்த மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் 2021ம் ஆண்டில் கால் தடம் பதிக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே உற்பத்தி ஆலை எங்கு அமைய இருக்கின்றது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!