Just In
- 1 hr ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 6 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 7 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 8 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
Don't Miss!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Sports IPL 2024 CSK : சிஎஸ்கே அணியின் அடுத்த மேட்ச் எப்போது? எந்த அணியுடன்? முழு விவரம்
- Technology அடிச்சார் பாரு அம்பானி! மாசத்துக்கு ரூ.150 தான்.. SMS, அன்லிமிடெட் Calls, டேட்டா, Jio Cinema-னு எல்லாமே உண்டு!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
செம்ம... பெட்ரோல்-டீசல் வாகனங்களை வாங்க போறீங்களா?.. அதுக்கு முன்னாடி இந்த செய்திய கொஞ்சம் படிச்சிடுங்க!
ரூ. 10,000 கோடியை மின்சார வாகனங்களுக்கான மானியத்திற்காக மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய அரசு ஃபேம் (Faster Adoption and Manufacturing of (Hybrid &) Electric Vehicles) திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின்கீழ் புதிய மின் வாகனங்களை வாங்குவோர்க்கு மானியம் உட்பட பல்வேறு சிறப்பு சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது.
இந்த நிலையில் ஃபேம் திட்டத்தின்கீழ் இன்னும் பல புதிய மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்க இருப்பதாக தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து நேற்று (வியாழக்கிழை) பாராளுமன்றத்தில் பேசிய அமைச்சர், "62 ஆயிரம் பயணிகள் பேருந்து மற்றும் கார்களுக்கும், 15 லட்சம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கும் மானியம் வழங்கப்பட இருக்கின்றது" என்று கூறினார்.
மின்வாகன பயன்பாடு ஊக்குவிப்பு மட்டுமின்றி மின்சார சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
இதற்காக (ஃபேம்2 திட்டத்திற்காக) ரூ. 10 கோடி பட்ஜெட்டை ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் கூறியிருக்கின்றார். இம்முறை பொது மற்றும் பகிர்வு போக்குவரத்தில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார். இதன்படி, 7000 இ-பேருந்துகள், 5 லட்சம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 55,000 மின்சார நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 10 லட்சம் பேட்டரி இருசக்கர வாகனங்களுக்கு மானியம் மற்றும் பிற சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.
இதுதவிர, மின் வாகனங்களின் மீது விதிக்கப்பட்டு வரும் வரியைக் குறைக்கு முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவாதக அமைச்சர் கூறியிருக்கின்றார். தற்போது 5 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகின்றது. இதனையே மின் வாகன ஊக்குவிப்பிற்காக மேலும் குறைக்க அரசு பரசீலித்து வருகின்றது.
இதன் மூலம் மின் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு உருவாகும். இத்துடன், மானியமும் கூடுதலாக வழங்குவதால் பெருமளவில் இதன் விலையைக் குறைக்க முடியும். ஆகையால், நிச்சயம் மக்கள் மத்தியில் மின் வாகனங்கள் பிரபலமடையும். இந்த நம்பிக்கையிலேயே அரசு மின் வாகனங்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றது.
மின்சார வாகனம் எதுவாக இருந்தாலும் அதன் கிலோவாட் (KWh) அடிப்படையிலேயே ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி, ஒரு கிலோவாட்டிற்கு ரூ. 10 என வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. பசுமையான (மாசில்லா) இயக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்திய அரசு இந்த சிறப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது.
இதுமட்டுமின்றி, காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்ட பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவை அதிகரிக்கச் செய்தல், பழைய (20 ஆண்டுகள் பழைய தனியார் மற்றும் 15 ஆண்டுகள் பழைய வர்த்தக) வாகனங்களையும் பயன்பாட்டில் இருந்து அடியோடு ஒழித்துக் கட்டும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.
-
இந்தியாவுலேயே நல்லா சேல்ஸ் ஆகுற கார் இதெல்லாம்! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா யாரும் வாங்க மாட்டாங்க!
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
-
வாகனங்கள் விஷயத்தில் புதிய விதியை அமலுக்கு கொண்டு வர போறாங்க.. இது என்ன புது குண்டா இருக்கு! என்ன அது?..