Just In
- 5 min ago ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
- 44 min ago கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
- 2 hrs ago சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
- 2 hrs ago முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
Don't Miss!
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- News ‛ஏசி ஹெல்மெட்’ வந்தாச்சி.. இனி கோடையிலும் ஜில்லுனு இருக்கலாம்.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா.. செம
- Sports முதல் பந்திலேயே சிக்ஸ்.. யாருப்பா தம்பி நீ.. இப்படி அடிக்கிற.. கங்குலி ரியாக்சனை பாருங்க!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இந்தியாவில் விற்பனை செய்த 9,498 அர்பன் க்ரூஸர் கார்களை திரும்பி அழைக்கும் டொயோட்டா... என்ன காரணம் தெரியுமா?
இந்தியாவில் குறிப்பிட்ட நாட்களில் தயாரித்த அர்பன் க்ரூஸர் கார்களை டொயோட்டா நிறுவனம் அழைத்திருக்கின்றது. இதற்கான காரணத்தை இப்பதவில் காணலாம்.
டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று அர்பன் க்ரூஸர். இது ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காராகும். மாருதி நிறுவனத்தின் விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி மாடலையே டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் எனும் பெயரில் ரீபேட்ஜ் செய்து விற்பனைச் செய்து வருகின்றது.
டொயோட்டா நிறுவனத்தின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக இது இருந்தாலும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் மாடலாக இக்கார் மாறியிருக்கின்றது. இந்த நிலையில், ஏற்கனவே விற்பனைச் செய்யப்பட்ட சுமார் 9,498 அர்பன் க்ரூஸர் கார்களை திரும்பி வருமாறு டொயோட்டா நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2020ம் ஆண்டு ஜீலை 28 தொடங்கி 2021 பிப்ரவரி 11 தேதி வரையில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களையே நிறுவனம் திரும்பி வருமாறு அழைத்திருக்கின்றது. இந்த குறிப்பிட்ட நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட அர்பன் க்ரூஸர் மாடல் கார்களில் பழுதான பாகம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைச் சரி செய்து தரும் நோக்கிலேயே டொயோட்டா உடனடியாக குறிப்பிட்ட நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட அர்பன் க்ரூஸர் கார்களை அழைத்துள்ளது. ஓட்டுநரின் பக்கவாட்டு பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஏற் பேக் விரிவதிலேயே கோளாறு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதனைச் சரி செய்யும் நோக்கிலேயே டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார்களை அழைத்திருக்கின்றது. விபத்து போன்ற பேரிடர் காலங்களில் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் கார்களில் ஏர் பேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதிலேயே கோளாறு ஏற்பட்டிருப்பது அர்பன் க்ரூஸர் கார் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இருப்பினும், இதுகுறித்து எந்த கவலையும்கொள்ள தேவையில்லை, நாங்களே அதனை சரி செய்து தருகின்றோம் என டொயோட்டா கூறியிருக்கின்றது. குறிப்பாக, எந்தவொரு கட்டணமுமின்றி இலவசமாக கோளாறுகளை நீக்க இருப்பதாக டொயோட்டா அறிவித்திருக்கின்றது.
அழைப்புகுறித்த தகவல் செல்போன் குறுஞ்செய்தி மற்றும் செல்போன் அழைப்புகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், இந்த பழுதான பாகத்தின் காரணமாக இதுவரை எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை டொயோட்டா நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 10.3 பிஎச்பி மற்றும் 138 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகின்றது.
இத்தகைய சிறப்பு திறன்கள் கொண்ட காரையே டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து கூடுதல் பிரீமியம் தர காராக இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த காரின் மீது ஏற்பட்டிருக்கும் கலங்கத்தை முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டிருக்கின்றது.
டொயோட்டா நிறுவனம் இந்தியர்களைக் கவரும் வகையில் ஆர்விஏ4 எனும் புதிய காரை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டு வருகின்றது. இந்த நிலையில், இந்தியா சாலையில் வைத்து இக்காரை தீவிர பல பரீட்சையில் நிறுவனம் ஈடுபடுத்தி வருகின்றது. டொயோட்டாவின் இந்த நடவடிக்கையால் ஆர்விஏ4 கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.
2021ம் ஆண்டிற்கு இக்கார் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிபியூ (முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்படுவது) வாயிலாக இக்காரை டொயோட்டா விற்பனைச் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இறக்குமதி மற்றும் பிற சேவை வரிகள் என அனைத்தும் சேர்த்து ரூ. 60 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் இக்கார் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகின்றது.
-
5 நிமிஷ சந்தோஷத்துக்காக... தவளை தன் வாயால் சிக்கிடுச்சு!! ஆடி காரில் செய்யும் வேலையா இது?
-
ரூ1.66 லட்சம் கம்மி விலையில் ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கலாம்! இப்படி ஒரு வழி இருப்பது பலருக்கும் தெரியாது!
-
நாய், பூனைகளுக்கு ஸ்பெஷல் கார் வந்தாச்சு! இதுக்காக தான் ஏகப்பட்ட பேர் வெயிட் பண்ணுறாங்க!