நல்லா போய்டு இருந்த காரை முட்டி இழுத்து சென்ற லாரி! இந்த வீடியோவ பாத்தீங்க லாரிக்கு முன்னால போகவே பயப்படுவீங்க
நல்ல போய்ட்டு இருந்த காரை லாரி ஒன்று முட்டி இழுத்து செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்குறித்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

அதிகம் விபத்துகள் அரங்கேறும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. நாள்தோறும் ஆயிரக்கணக்கான விபத்துகள் இங்கு அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. இதனைக் குறைக்கும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், விபத்துகளின் எண்ணிக்கை சற்றும் குறையாமல் அரங்கேறி வருவது வேதனையளிக்கும் விஷயமாக இருக்கின்றது.

நாட்டில் அரங்கேறும் பெரும்பாலான விபத்து சம்பவங்களுக்கு போக்குவரத்து விதிமீறல்களே முக்கிய காரணமாக இருக்கின்றுத. இதனை உறுதிப்படுத்துகின்ற வகையிலான ஓர் சம்பவமே தற்போது கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் அரங்கேறியிருக்கின்றது.

ஆமாங்க, நல்லா போய்ட்டு இருந்த காரை முட்டி, தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் கேரளா மாநிலத்திலேயே அரங்கேறியிருக்கிறது. ஆனால், எந்த பகுதியில் அரங்கேறியது என்ற துள்ளியமான தகவல் வெளியாகவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் அதிர்ச்சிமிகுந்த வீடியோகுறித்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

சற்று குறுகிய, வளைவுகள் மற்றும் ஏற்றம், இறக்கம் அதிகம் கொண்ட சாலைகளுக்கு பெயர்போன மாநிலமாக கேரளா இருக்கின்றது. ஆனால், விபத்து நடைபெற்ற இடம் சவால்கள் அதிகம் நிறைந்த சாலையாக தெரியவில்லை. நேரான சாலையிலேயே விபத்து அரங்கேறியிருக்கின்றது.

முன்னாள் சென்றுக் கொண்டிருந்த காரை ஓவர் டேக் செய்யும்போது ஏற்பட்ட கவனக் குறைவு காரணமாக இந்த விபத்து அரங்கேறியிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், மாருதி ஆல்டோ கார் சாலையின் ஓரத்தில் மிதமான வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கையில், அதை ஏறி செல்ல முயற்சித்த லாரி, தவறுதலாக ஆல்டோவின் மீது மோதியது.

லாரி தனக்கான பாதையைத் தாண்டி தவறான பாதையில் பயணித்து வந்ததே இவ்விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. அவ்வாறு, வரும்போது எதிரில் மற்றொரு லாரி வந்திருக்கின்றது. அதற்கு வழி விடும் நோக்கில் ஆல்டோவை ஓவர்டேக் செய்த லாரி லேசாக வலதில் இருந்து இடது பக்கமாக திரும்பியது.

அப்போதே ஆல்டோவின்மீது லாரி மோதி அதை இழுத்துச் செல்ல நேர்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சம்பவத்தில் எந்தவொரு கசப்பான நிகழ்வுகளும் அரங்கேறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆல்டோவிற்குள் இருந்தவர்களுக்கு மிக லேசான காயங்களே ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், காரின் பக்கவாட்டு மற்றும் முகப்பு பகுதி லேசான சேதங்களைச் சந்தித்துள்ளது. இதுபோன்ற கசப்பான அனுபவங்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்குமாறு துறைச்சார்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், விதியை மீறி இதுபோன்ற வீண் சிக்கல்களில் அவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications








