Just In
- 8 min ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 2 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 7 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 7 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
Don't Miss!
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- News ஃபுட் பாய்ஸன் காரணமாக திடீரென டெல்லி திரும்பிய ராகுல் காந்தி.. இன்று மீண்டும் பிரச்சாரம் தொடக்கம்!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அபராத செல்லாண் வழங்கிய காவலர்! தனியாக அழைத்து தரமான சம்பவம் செய்த அமைச்சர்! ரொம்ப நல்லவரா இருப்பாரு போலிருக்கே
தனது காருக்கு போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத செல்லாணை வழங்கிய காவலரை தனியாக அழைத்து அமைச்சர் ஒருவர் வாழ்த்து தெரிவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிகழ்வு எந்த மாநிலத்தில் அரங்கேறியது என்பது பற்றிய முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.
தெலங்கானா மாநிலத்தின் அமைச்சர் கேடி ராம ராவ் காருக்கு அண்மையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் இருவர் செல்லாணை அனுப்பி வைத்தார். போக்குவரத்து காவலர்களின் இந்த துணிச்சலான செயல் ஆளும் கட்சியின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேசமயம், பொதுமக்கள் மத்தியில் காவலரின் இந்த செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரபலம் என்பதை அறிந்தும் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறி நெட்டிசன்கள் அவர்களை வாழ்த்து மழையில் நனைத்தனர்.
அக்டோபர் 2ம் தேதி அன்று அரசியல்வாதியின் காரின் மீது காவலர்கள் நடவடிக்கை எடுத்திருந்தார். இந்நிகழ்வு நடைபெற்ற இரண்டு நாட்கள் கழித்து தனக்கு செல்லாணை வழங்கிய இரு காவல்துறை அதிகாரிகளையும் அமைச்சர் ராம ராவ் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகின்றது.
பொதுவாக, இதுமாதிரியான நிகழ்வுகளின் போது அரசியல்வாதிகள் தங்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது வழக்கம். ஆனால், விநோதமாக அமைச்சர் ராம ராவ், தன்மீது நடவடிக்கை எடுத்த போக்குவரத்து துணை ஆய்வாளர் இளையா மற்றும் கான்ஸ்டபிள் வெங்கடேஸ்வரலு ஆகிய இருவரையும் வாழ்த்தி, அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அனுப்பி வைத்திருக்கின்றார்.
அமைச்சர் என்ற விலக்கு இல்லாமல் சட்டப்படி காவலர்கள் நடவடிக்கை எடுத்திருப்பதை பாராட்டி அவர் வாழ்த்து தெரிவித்திருக்கின்றார். அமைச்சரைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுத்த போக்குவரத்துக் காவலர்களுக்கு ஹைதராபாத் நகர காவல் ஆணையர் அஞ்ஜனி குமாரும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்.
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாபு காட் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த அமைச்சர் கேடிஆர் சென்றிருக்கின்றார். இந்நிகழ்வில் மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஹர்யானா மாநில ஆளுநர் பந்தாரு தத்தாத்ரேயா மற்றும் உள்துறை அமைச்சர் மஹ்மூத் அலி ஆகியோர் கலந்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுடன் சேர்ந்தே கேடிஆர்-ம் அப்பகுதியை விட்டு கிளம்பியதாகக் கூறப்படுகின்றது. அந்த நேரத்தில் ஆளுநர் தமிழிசையின் கான்வாயை இடைமறைக்கும் வகையில் அமைச்சர் கேடிஆருக்கு சொந்தமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் எதிர் திசையில் வந்திருக்கின்றது. அந்த நேரத்தில் அதே பகுதியில் பணியில் இருந்த துணை ஆய்வாளர் இளையா, காரை நிறுத்தி, அதன் ஓட்டுநருடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, அமைச்சரின் இன்னோவா காருக்கு அபராத செல்லாணையும் காவலர் வழங்கினர். இந்த நிகழ்வு கேடிஆரின் ஆதரவாளர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது. ஆகையால், சில நேரங்கள் அந்த பகுதி பரப்புடன் காணப்பட்டது. இதுகுறித்த வீடியோ அண்மையில் வைரலாகியது குறிப்பிடத்தகுந்தது. காவலரின் இந்த செயலுக்கே தற்போது பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
அமைச்சர்கள், அரசியல்வாதிகளுக்கு சிறப்பு பாதையை காவலர்கள் ஏற்படுத்தி வந்த காலம் தற்போது மாறி, அவர்கள் விதிமீறலில் ஈடுபட்டால் அபராத செல்லாண் வழங்கும் நிகழ்வு இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. இது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியம் கலந்த வரவேற்பைப் பெற தொடங்கியிருக்கின்றது. காவல்துறை இணையத்தில் வைரலாகும் வீடியோவின் அடிப்படையில் போக்குவரத்து விதிமீறல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.
இதுமாதிரியான நடவடிக்கையில் காவலர்கள், அரிசயல்வாதிகள் மற்றும் அரசின் முக்கிய பணிகளில் இருப்பவர்கள்கூட அண்மைக் காலமாக சிக்கி வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தகுந்தது. போக்குவரத்து விதிமீறல்களே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம். எனவேதான் காவல்துறை அதிகாரிகள் விதிமீறல் வாதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
சிசிடிவி கேமிரா, சமூக வலை தளத்தில் வைரலாகும் வீடியோ என பல கோணங்களில் தங்களின் பார்வையை செலுத்தி நடவடிக்கை வலையை வீசி வருகின்றனர். இதன் விளைவாக போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: முதல் இரு படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!